புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 நவ., 2015

துருக்கி எல்லைபகுதிக்கு ஏவுகணைகளை அனுப்பும் ரஷ்யா மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம்



ரஷியாவின் போர் விமானம் ஒன்று நேற்று துருக்கியின் சிரியா எல்லையில் பறந்தது. அப்போது அந்த விமானத்தை துருக்கியின் எப்-16 ரக போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தின.தங்களது வான் எல்லைக் குள் அத்துமீறி நுழைந்த தால்தான் ரஷியாவில் போர் விமானம் சுட்டு வீழ்த் தப்பட்டதாக துருக்கி தெரிவித் துள்ளது. எச்சரிக்கை விடுத் தும் அத்துமீறி பறந்த தால் சுடப்பட்டதாக கூறியுள்து.

ரஷிய போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கடும் கண்டனம் தெரி வித்துள்ளார். விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை ஒரு போதும் சகித்து கொள்ள முடியாது. துருக்கி தங்களை முதுகில் குத்தி விட்டது. சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம் துருக்கியில் இருந்து சிரியா எல்லைக்குள் 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு அப்பால் விழுந்துள்ளது. எனவே துருக்கி வான் எல்லைக்குள் அத்துமீறி பறந் திருக்க வாய்ப்பில்லை. என கூறி உள்ளார்

துருக்கியின் ‘எப்–16’ ரக போர் விமானங்கள், ரஷியாவின் போர் விமானம் ஒன்றை சிரியா எல்லையில் நேற்று சுட்டு வீழ்த்தியது. துருக்கி வான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததால்தான் ரஷியாவின் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டு உள்ளது. இச்சம்பவம் சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. சிரியாவில் ரஷியா விமானத்தை சுட்டு வீழ்த்திய துருக்கிக்கு ரஷியா கண்டனம் தெரிவித்து உள்ளது. துருக்கியின் வான்பகுதிக்குள் ரஷியாவின் போர் விமானம் செல்லவில்லை என்று ரஷியா தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த விவகாரத்தை  நாங்கள் தீவிரமாக்க விரும்பவில்லை என்று துருக்கி தெரிவித்து உள்ளது.

இது குறித்து  பேசிய எர்டோகன், “இவ்விவகாரத்தை தீவிரப்படுத்த எங்களுக்கு எந்தஒரு எண்ணமும் எங்களுக்கு கிடையாது. நாங்கள் எங்களது பாதுகாப்பு மற்றும் எங்களுடைய எல்லையின் உரிமை பாதுகாத்து உள்ளோம்,” என்று கூறினார்.

இந்த நிலையில் ரஷ்யா தனது ஏவுகணைகளை துருக்கியின் எல்லைபகுதிக்கு அனுப்பி வைத்து உள்ளது இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் ஏற்பட்டு உள்ளது.

ரஷ்ய பாதுகாப்பு மந்திரி ஷெர்கி ஷோயிகு கூறும் போது லடாக்கியாவில் உள்ள சிரியா மாகாணத்தின் ஹெமிமீம்  விமான தளத்திற்கு ஏவுகணைகள் அனுப்பபடும் என கூறினார். இந்த பகுதி துருக்கியின் எல்லையில் உள்ளது.

எஸ்-400 விமான எதிர்ப்பு ஏவுகணைகள் துருக்கி தலைவாசலில் குவிக்கபடும். 50 மைல் தூரம்  நீண்ட தூர விமானங்களை   சுட பயன்படுத்தபடும் நவீன ஆயுதங்கள் எல்லையை சென்றடையும். என தகவல்கள் வெளியாகி உள்ளது

ad

ad