புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஏப்., 2016

கொலைகாரி என்று சொல்வேன் : ஜெயலலிதா மீது வைகோ குற்றச்சாட்டு



விருதாச்சலம் அதிமுக பிரச்சார கூட்டத்தில் நான்கு பேர் பலியானதற்கு ஜெயலலிதாதான் பொறுப்பு ஏற்க வேண்டும் வைகோ குற்றச்சாட்டினார். 

துறைமுகம் தொகுதியில் மதிமுக வேட்பாளரை அறிமுகம் செய்து பேசிய வைகோ, ’’இது என்ன இடி அமீன் சர்க்காரா? லேடி இடி - அமீனா ஜெயலலிதா? இது என்ன ஹிட்லர் சர்க்காரா? லேடி ஹிட்லரா ஜெயலலிதா?  இது என்ன முசோலினி சர்க்காரா? லேடி முசோலினியா ஜெயலலிதா?  

இந்த நாலு பேர் சாவுக்கு நீங்கதான் காரணம்.  உங்களை நான் கொலைகாரி என்று சொல்வேன்.  வழக்கு போடுங்க.  ஜெயலலிதா ஒரு கொலைகாரி என்பதை நேரடியாக குற்றம்சாட்டுகிறேன்’’ என்றார்.

ad

ad