புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 மே, 2019

செப்பு தொழிற்சாலை விவகாரம் ரிஜடியிடம்?

தற்கொலையாளியின் வெல்லம்பிட்டிய செப்புத் தொழிற்சாலை தொடர்பான விசாரணை​யை பதில் பொலிஸ்மா அதிபரின் உத்தரவுக்கமைய, தமது பொறுப்பின் கீழ் எடுத்துள்ளதாக, பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் இன்று கொழும்பு மேலதிக நீதவான் பிரியங்க லியனகேயிடம் அறிவித்துள்ளனர்.
மேலும் குறித்த செப்புத் தொழிற்சாலை சம்பவம் தொடர்பில், கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 10ஆவது சந்தேகநபரான, அப்துல்லா எனப்படும் கருப்பையா ராஜேந்திரனை எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் பிரியங்க லியனகே உத்தரவிட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தின் ஏனைய 9 சந்தேகநபர்களையும் நாளை தொடக்கம் ஜூன் மாதம் முதலாம் திகதி வரையான காலப்பகுதிக்குள் பயங்கரவாத விசாரணைப் பிரிவில் ஆஜராகி வாக்குமூலத்தைப் வழங்குமாறும் நீதவான் இதன்போது உத்தரவிட்டுள்ளார்.

ad

ad