புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 அக்., 2019

சிவாஜிலிங்கம் மற்றும் ஹிஸ்புல்லாவால் நம்பிக்கையடைந்திருக்கும் மஹிந்த அணி; காரணம் இதுதான்!

சிதமிழ் மக்கள் செறிந்துவாழும் வடக்கு கிழக்கு பகுதிகளில் ஐக்கிய தேசிய முன்னணிக்கு கிடைக்கும் வாக்குகளை சிவாஜிலிங்கமும் - ஹிஸ்புல்லாவும் சிதறடிப்பார்கள் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

அதனால் தமிழர் பகுதிகளிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டதாக பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் இம்முறை 35 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். குறிப்பாக வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கம், கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா ஆகியோரும் உள்ளடங்குவதோடு முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவும் போட்டியிடுகின்றார்.

இதன் காரணமாக மக்களின் பல்வேறு வாக்குகளும் பல கட்சிகளுக்கு பிரிந்து செல்லும் நிலை உருவாகியிருப்பதோடு பிரதான வேட்பாளர்கள் எவருக்கும் 50 சதவீத வாக்குகளைப் பெற முடியாத நிலை உருவாகியிருப்பதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

இந்த நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பிலுள்ள கட்சித் தலைமையகத்தில் நேற்று (11) பகல் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா கடந்த ஜனாதிபதி தேர்தலில் அன்னப்பட்சிக்கு வாக்களித்த மக்களின் வாக்குகள் இம்முறை பல கோணங்களில் சிதறடிக்கப்பட்டுப் போவதால் அதன் அனுகூலம் கோட்டாபயவுக்கே சாரும் என்று கூறினார்.

கடந்த முறை வாக்குகள் முடிவைப் பார்க்கும்போது அன்னப்பட்சிக்கான வாக்குகள் இம்முறை குறைந்துள்ளன. 2015ஆம் ஆண்டில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்பான்மை முஸ்லிம்களின் வாக்குகள் அன்னப்பட்சிக்குக் கிடைத்தன. ஹிஸ்புல்லா ஒரு இனவாதி. அவரை கிழக்கு மாகாண ஆளுநர் பதவியிலிருந்து ஜனாதிபதியால் துரத்திவிடப்பட்டவர். ரணிலுக்கு முடியாதுபோனது ரிஷாட்டை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்குவதற்கு. காத்தான்குடி பகுதியில் இனவாதிகளின் பல வாக்குகளும் ஹிஸ்புல்லாவுக்கே கிடைக்கும். இந்த நிலையில் கடந்த முறை அப்பகுதி வாக்குகள் அன்னப்பட்சிக்கே கிடைத்தன. ஆகவே இம்முறை ஐக்கிய தேசிய முன்னணிக்கு வாக்குச்சரிவே ஏற்பட்டுள்ளது. 62 இலட்ச வாக்குகளில் ஜே.வி.பிக்கு செல்லும், இம்முறை சிவாஜிலிங்கமும் போட்டியிடுவதால் அவருக்கு எத்தனை வாக்குகள் பிரிந்துசெல்லும் என அனுமாணிக்க முடியாது.

கடந்த முறை மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற்ற வாக்குகளை விடவும் கடந்த பொதுத் தேர்தலில் பெற்ற வாக்குகள் குறைந்துள்ளன. ஆனால் டக்ளஸ் தேவானந்தாவுக்கு 40 வீதத்தில் அதிகரித்துள்ளது. விஜயகலா கூறுவதுபோல தமிழ் முஸ்லிம் மக்களின் வாக்குகள் சஜித்திற்கே கிடைக்கும் என்பதை ஏற்கமுடியாது. அதேபோல தோட்டத் தொழிலாளர்களது வாக்குகளும் கோட்டாபயவுக்கே திரும்பியுள்ளன. கடந்த முறை ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் அன்னப்பட்சிக்குக் கிடைத்த வாக்குகளை இம்முறை ஹிஸ்புல்லாஇ,சிவாஜிலிங்கம் ஆகியோர் சிதறடிக்கச் செய்வார்கள். அதேபோல இன்னும் பல முஸ்லிம் வேட்பாளர்களும் உள்ளனர். அவர்களும் வாக்குகள் செல்லும். அதேபோல நுவரெலியாவில் ஆறுமுகன் தொண்டமானும் சுதந்திரக் கட்சியின் இணைவிற்குப் பின்னர் கோட்டாபய ராஜபக்சவுக்கே ஆதரவளிப்பார் என்று அறியக்கிடைத்துள்ளது. இவ்வாறு பல வழிகளிலும் கோட்டாபய ராஜபக்சவுக்கு இன்று வாக்குகள் குவிக்கின்றன என அவர் மேலும் தெரிவித்தார்.

ad

ad