சுவிஸ் போன்று பிரான்சில் நெருக்கடி நீடிக்கும் வரை நிதி உதவி! - நிதி அமைச்சர் உறுதி
பிரான்சில் முதல்கட்டமாக ஐந்து மில்லியன் ஊழியர்களுக்கு (குறுகியகால வேலை இழந்தோருக்கு) ஊதியம் வழங்கப்பட உள்ளது. இது குறித்து நிதி அமைச்சர் Bruno Le Maire மேலும் தெரிவிக்கையில், <<கடந்த எட்டு நாட்களில் 100,000 நிறுவனங்களுக்கு €20 பில்லியன் யூரோக்களை ஒதுக்கியுள்ளோம். பொருளாதாரத்தை தக்கவைப்பதற்காக இந்த தொகை வழங்கப்பட்டுள்ளது. நெருக்கடி நிலமைகள் நீடிக்குமானால், €300 பில்லியன் வங்கிக்கடன் பெற்று பொருளாதாரத்தை காப்பாற்ற நேரிடும்>> என நிதி அமைச்சர் Bruno Le Maire தெரிவித்தார்.
இந்த 100,000 நிறுவனங்களைச் சேர்ந்த ஐந்து மில்லியன் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்பட உள்ளதாகவும், இதுவரை மொத்தமாக 450,000 சிறிய மற்றும் பெரிய வர்த்தக நிறுவனங்கள் இழப்பீடு கோரியுள்ளதாகவும், அவர்களுக்கு <<தேவைக்கேற்ப நிதி வழங்கப்படும்>> எனவும் நிதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.