நயிhனதீவு நாகபூசணி அம்மனுக்கு வந்த சோதனை.நயினாதீவுக்கான ஈபிடிபி பி ச உறுப்பினர்கள் தவிசாளரும் ஒத்துழைப்பு ?
வரலாற்று புகழ் மிக்க நயிhனதீவு நாகபூசணி ஆலயத்தினை அவமதிக்கும் வகையில் இலங்கை காவல்துறை மற்றும் கடற்படையினர் களமிறங்கியமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.
தமது பாதணிகளை கூட கழற்றாது காவல்துறை மற்றும் கடற்படை அதிகாரிகள் கொரோனோ தடுப்பென்ற பேரில் திருவிழா நிகழ்வை தடுத்துள்ளனர் இத்தனைக்கும் நயினாதீவு மக்கள் தமது இரண்டு பிரதேச சபை உறுப்பினர்களையும் ஈபிடிபி கட்சிக்கே தெரிவாக்கி கொடுத்திருந்தார்கள் அத்துடன் வேலணை பிரதே ச சபை தவிசாளர் என்ற உயரிய ஆளுமை மிக்க அதிகாரத்தை கொண்டுள்ள தவிசாளர் பதவியை அலங்கரிப்பவரும் நயினாதீவை சேர்ந்தவரே . பதவி சுகதுக்கக்க ஆளும் வர்க்கத்துக்கு சுரண்டிக்கொண்டு முதுகு சொறிஞ்சு கொண்டிருக்கும் இவர்கள் இந்த கேவலமான பெருமை மிக்க ஆலயத்தில் நடக்கும் கொடுமைகளை கண்டும் காணாதது போல வாய் மூடி காய் கட்டி மௌனமாக இருந்து வருகிறார்கள் நல்லூர் போன்ற ஆலயங்களுக்கு வருகை தரும் ஜனாதிபதி பிரதமர் மந்திரிகள் இராணுவ தளபதிகள் கூட வேட்டி சால்வையுடன் காலில் பாதணி இன்றி தரிசிப்பது யாவரும் அறிந்ததே இங்கு சாதாரண காவலர் கூட கூச்சமின்றி பாதணியுடன் பிரவேசிப்பது மக்கள் மனதில் வேதனையை உண்டுபண்ணியுள்ளது