புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஏப்., 2021

ஐ.பி.எல். 2021; சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

www.pungudutivuswiss.com
பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின், இன்றைய 8-வது லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லோகேஷ் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.


இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் டோனி, பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து 7.30 மணிக்கு துவங்க இருக்கும் ஆட்டத்தில் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் ஓவரிலேயே தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால்(0) பவுல்ட் ஆனார்.

இதையடுத்து தீபக் சாஹர் வீசிய 3வது ஓவரில் கே.எல்.ராகுல்(5) ரன் அவுட் ஆகி ஆட்டமிழந்தார். அடுத்ததாக கிறிஸ் கெய்ல் 10 ரன்களில் கேட்ச் கொடுத்து வெளியேற, தீபக் ஹூடா(10), நிக்கோலஸ் பூரன்(0) ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

மறுபுறம் சாருக்கான் நிதானமாக ஆடி பஞ்சாப் அணிக்கு சற்று ஆறுதல் அளித்தார். அரைசதத்தை நெருங்கிய சாருக்கான்(47), சென்னை வீரர் சாம் கர்ரனின் பந்துவீச்சில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். இதற்கடுத்து வந்தவர்களும் நிலைத்து நின்று ஆடாத நிலையில், பஞ்சாப் அணியின் ரன் ரேட் வெகுவாக குறைந்தது.

இறுதியாக பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக சாருக்கான் 47 ரன்கள் அடித்திருந்தார். சென்னை அணியில் அதிகபர்சமாக தீபக் சாஹர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனை தொடர்ந்து 107 ரன்கள் என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது.

சென்னையின் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் 16 பந்துகளை சந்தித்து 5 ரன்கள் எடுத்திருந்த நிலையில், கேட்ச் ஆகி விக்கெட்டை பறிகொடுத்தார். இதனையடுத்து டு ப்ளிசிஸ் உடன் மொயின் அலி ஜோடி சேர்ந்தார். குறைவான இலக்கு என்பதால், சீரான இடைவெளியில் பவுண்டரிகளையும், சிக்சர்களையும் பறக்கவிட்டு நிதானமான ஆட்டத்தை இருவரும் வெளிப்படுத்தினர்.

இதையடுத்து முருகன் அஸ்வின் வீசிய 13 வது ஓவரில் மொயின் அலி(46) கேட்ச் ஆன போது இந்த ஜோடி பிரிந்தது. அடுத்து வந்த ரெய்னா 8 ரன்களில் அவுட்டாகி வெளியேற, இறுதி வரை நிலைத்து நின்று ஆடிய டு ப்ளிசிஸ், அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

இறுதியாக 15.4 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து, 107 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டு ப்ளிசிஸ்(36), சாம் கர்ரன்(5) ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். பஞ்சாப் அணியில் முகமது சமி 2 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங் மற்றும் முருகன் அஸ்வின் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

ad

ad