விசேட கலந்துரையாடல் ஒன்றிற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகள் சிலர் ஜனாதிபதியை சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பில் தேர்தல் ஒன்று குறித்து கருத்து வெளியிடப்பட்டதா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் விரைவில் தேர்தலொன்று இடம்பெறும் என ரணில் விக்கிரமசிங்க சூசகமாக தெரிவித்தார் என குறிப்பிட்டுள்ளார். ரணில் விக்கிரமசிங்க தேர்தல் குறித்து எதனையும் விசேடமாக தெரிவிக்கவில்லை. ஆனால் விரைவில் தேர்தலொன்று இடம்பெறலாம் என்பது அவரது பேச்சில் வெளிப்பட்டது என தெரிவித்துள்ள சாகர காரியவசம் அது உள்ளுராட்சி சபை தேர்தலா அல்லது ஜனாதிபதி தேர்தலா என்பது குறித்து தெளிவாக அறிந்து கொள்ளமுடியவில்லை எனவும் தெரிவித்துள்ளார். |