ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சியில் நடைபெற்ற குறித்த ஊடக சந்திப்பில் வடக்கு கிழக்கு வலிந்து கானாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தின் செயலாளர் சிவானந்தன் ஜெனிரா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து குறிப்பிடுகையில் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் காணாமல் ஆக்கப்பட்ட தங்களுடைய உறவுகளுக்கு நீதி கோரி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற தாங்கள் இலங்கையில் கடந்த ஆட்சியாளர்களால் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு இருக்கின்றோம். அந்த அடிப்படையிலேயே உள்நாட்டு பொறி முறை ஒன்றை எதிர்த்து சர்வதேச தரத்திலான ஒரு பொறி முறை ஊடாகவே தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றோம் . இன்று திங்கட்கிழமை (6) யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கின்ற போராட்டத்திற்கு நமக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதையும் குறிப்பிட்டுள்ளனர் |