![]() செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வை ஐ.நா நிபுணர் குழு மேற்பார்வை செய்ய வலியுறுத்தி வடமராட்சி - கரவெட்டி தெற்கு மேற்கு பிரதேச சபைக் கூட்டத்தில் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. |
-
24 ஜூலை, 2025
சர்வதேச விசாரணையை வலியுறுத்தி கரவெட்டி பிரதேசசபையில் தீர்மானம்! [Thursday 2025-07-24 07:00]
www.pungudutivuswiss.com
23 ஜூலை, 2025
www.pungudutivuswiss.com
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
--------------------------
திருமதி இராசலிங்கம் புஸ்பராசமணி (புஸ்பம்)
தோற்றம்-10 MAR 1938,,மறைவு-21 JUL 2025
யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மல்லாவி(ஸ்ரீ வேல் முருகன் ஸ்ரோர்ஸ்), யாழ். ஆனைப்பந்தி ஆகிய இடங்களை வதிவிடமாகவும், தற்போது கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட இராசலிங்கம் புஸ்பராசமணி அவர்கள் 21-07-2025 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற சுப்ரமணியம், செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற அம்பலவாணர், செங்கமலம் தம்பதிகளின் அருமை மருமகளும்,அம்பலவாணர் இராசலிங்கம்(மல்லாவி ஸ்ரீ வேல் முருகன் ஸ்ரோர்ஸ்) அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான சற்குணம், சிவசரணம், சண்முகராசா(மல்லாவி நீதிராசா ஸ்ரோர்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,இரவீந்திரன்(ஜேர்மனி), வான்மதி(ஜேர்மனி), இளமதி(பிரித்தானியா), வளர்மதி(ஜேர்மனி), மகேந்திரன்(செட்டி- Toronto), சிவமதி(Montreal, கனடா), தவமதி(சுவிஸ்), சதாமதி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,இலிங்கேஸ்வரி(சாந்தி), சிவநேசலிங்கம், திருபுவனராஜா, ஸ்ரீநாதன், காலஞ்சென்ற சசிறேகா, பாலசுந்தரம்(ரூபன்), தருமரட்னம்( உரிமையாளர் Naga and Thavamahal Real Estate.St.Gallen .Swiss.சிறுவன்), சதீஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,இலக்கியா- Dr.பிரதீஸ்குமார், கீர்த்தியா, Dr.கீர்த்தனன், Dr.ராஜ்விக்ரம்(ராஜி), ஜெனுபா(சாரா)-நிமேஸ், சரத்சேரன் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,பிரசாத்-தட்ஷாஜினி, பிரவீனா-தீபன், தினேஸ்-ரிவின், Dr.திவ்யா-Dr.செந்தூரன், சௌமியா, ரினா-மியானி, அபினா, ஜெனுதன், ஜெஸ்மிதா, அஜய், அஜினா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,அர்ஜீன் ஜெய், ஜெய் ராகுல், அமிரா, ஜெய்றோகன், கிரிஷான், கறிஷான், கன்ஷிகா, எஜடன், தரன்மதி, றிகான், சிறேகா, மாஜா, கேடன் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,காலஞ்சென்றவர்களான கதிரவேலு, குழந்தைவேலு, ஆறுமுகம், சொக்கலிங்கம், அன்னலிங்கம், கோணேஸ்வரி, தனவதி, சிவபாக்கியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,செல்லாச்சி, சின்னத்தங்கம், கனகம்மா, சற்குணம், கமலாம்பிகை, நாகரட்னம்(செல்லத்தம்பி) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். நன்றிதகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 26 Jul 2025 5:00 PM - 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Get Direction
Sunday, 27 Jul 2025 6:00 AM - 6:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Get Direction
Sunday, 27 Jul 2025 6:30 AM - 8:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Get Direction
Sunday, 27 Jul 2025 9:00 AM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
மகேந்திரன்(செட்டி) - மகன்Mobile : +16478315672 இரவீந்திரன் - மகன்Mobile : +4917663648395 வளர்மதி - மகள்Mobile : +4915218500986 ரூபன் - மருமகன்Mobile : +15142268698 தவமதி - மகள்Mobile : +41791504324 வான்மதி - மகள்Mobile : +491749141869 தருமரட்னம்(சிறுவன்-மருமகன் Mobile : +41797844348
சுட்ட கோழி சாப்பிட்ட 22 பேர வைத்தியசாலையில் அனுமதி! [Wednesday 2025-07-23 07:00]
www.pungudutivuswiss.com
![]() உணவு ஒவ்வாமை காரணமாக கிண்ணியா பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுக்குட்பட்ட, 22 பேர் நேற்று கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 9 பெண்களும், 6 ஆண்களும் 3 சிறுவர்களும் அடங்குகின்றனர். இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 ஐந்து பேரும், மற்றும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 6 ஆறு பேரும் வைத்தியசாலை சிகிச்சை பெற்று வருகின்றனர். |
22 ஜூலை, 2025
தேவநேசன் நேசையா குழுவின் அறிக்கையுடன் இணைத்து செம்மணியை ஆராய வேண்டும்! [Tuesday 2025-07-22 08:00]
www.pungudutivuswiss.com
![]() யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற காணாமலாக்கப்படல்கள் தொடர்பில் கலாநிதி தேவநேசன் நேசையா தலைமையிலான குழுவினரினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் உள்ள விபரங்களை தற்போது செம்மணி சித்துபாத்தி மனிதப்புதைகுழியில் கண்டறியப்படும் மனித எச்சங்களுடன் தொடர்புபடுத்தி ஆராய்வதன் ஊடாக பல்வேறு உண்மைகளை வெளிக்கொணரமுடியும் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார் |
21 ஜூலை, 2025
ஜேர்மனியில் படிக்க திட்டமிடுகிறீர்களா? உலகின் சிறந்த மாணவர் நகரங்கள் இதோ! [Sunday 2025-07-20 07:00]
www.pungudutivuswiss.com
![]() ஜேர்மனி இன்று இந்திய மாணவர்கள் உட்பட உலகெங்கிலும் உள்ள மாணவர்களுக்கு மிகுந்த விருப்பமான உயர்கல்வி தலமாக உருவெடுத்துள்ளது. சமீபத்திய தகவலின்படி, ஜேர்மனியில் கல்வி பயிலும் சர்வதேச மாணவர்கள் எண்ணிக்கை மொத்த மாணவர்கள் தொகையில் 13 சதவீதமாக உள்ளனர். இதில் இந்திய மாணவர்கள் 42,578 பேருடன் முதலிடம் பிடித்துள்ளனர். |
சம்பூரில் மனித எலும்பு எச்சங்கள்! [Monday 2025-07-21 07:00]
www.pungudutivuswiss.com
![]() சம்பூர் கடற்கரையை அண்மித்த சிறுவர் பூங்கா பகுதியில் நேற்று கண்ணிவெடி நிறுவனத்தினர் அகழ்வில் ஈடுபட்ட போது மனித மண்டையோடு மற்றும் எலும்பு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. |
பொறுப்புக்கூறலை முடக்க அரசாங்கத்துக்கு துணைபோகிறது தமிழரசுக் கட்சி! [Monday 2025-07-21 07:00]
www.pungudutivuswiss.com
![]() ஜெனிவா கூட்டத்திற்கு முன்னர் பாதிக்கப்பட்ட தரப்பினரின் கோரிக்கைகளை முன் வைப்பதன் ஊடாக கடுமையான சர்வதேச அழுத்தத்தை கொடுக்கும் செயல் வடிவத்தை ஏற்படுத்துவதே எமது நோக்கம் என தமிழ் தேசிய மக்கள் முன்னனணியின் தலைவர் , நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார் |
மூளாயில் குழு மோதல் - பொலிஸ் துப்பாக்கிச் சூடு! [Monday 2025-07-21 07:00]
www.pungudutivuswiss.com
![]() வட்டுக்கோட்டை- மூளாய் பகுதியில் நேற்று இரண்டு குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலில் மோட்டார் சைக்கிள் ஒன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. நேற்றுமுன் தினம் தனி நபர்களுக்கிடையே தாக்குதல் சம்பவம் இடம்பெற்றது. இந்த பிரச்சினையானது பொலிஸ் நிலையம் வரை சென்ற பின்னர் ஞாயிற்றுக்கிழமை இரண்டு தனிநபர்களும் இரு பிரிவுகளாக பிரிந்து தாக்குதலில் ஈடுபட்டனர். |
19 ஜூலை, 2025
தையிட்டி திஸ்ஸ விகாரை தொடர்பாக சட்ட நடவடிக்கை!- வலி.வடக்கு பிரதேச சபை தீர்மானம். [Friday 2025-07-18 16:00]
www.pungudutivuswiss.com
![]() யாழ். தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது |
உதவிப் பிரதேச செயலர் தமிழினி மரணமான வழக்கில் கணவன் கைது! [Friday 2025-07-18 16:00]
www.pungudutivuswiss.com
![]() சாவகச்சேரி உதவி பிரதேச செயலாளராக கடமையாற்றிய போது தீயில் எரிந்து உயிரிழந்த தமிழினியின் கணவரான கிராம சேவையாளர் சதீஸ் கைது செய்யப்பட்டுள்ளார். |
18 ஜூலை, 2025
இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி- வலி.கிழக்கு பிரதேச சபையில் தீர்மானம். Top News [Friday 2025-07-18 07:00]
www.pungudutivuswiss.com
இலங்கையில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டது இனப்படுகொலை எனவும் அவ் இனப்படுகொலைக்கு இலங்கை அரசு காரணம் என்ற நிலையில், இலங்கையின் உள்நாட்டு விசாரணைகளில் முற்றிலும் எமது மக்களும் நாமும் நம்பிக்கை இழந்துள்ளோம். இவ் இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி வேண்டும் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபை ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. |
செம்மணி புதைகுழி குறித்து சர்வதேச விசாரணை- மட்டக்களப்பு மாநகரசபையில் தீர்மானம்! [Friday 2025-07-18 07:00]
www.pungudutivuswiss.com
![]() யாழ்ப்பாணம், செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணையைக் கோரி முன்வைக்கப்பட்ட பிரேரணையை மட்டக்களப்பு மாநகரசபை ஏகமனதாக நிறைவேற்றியுள்ளது. |
17 ஜூலை, 2025
ஹரி ஆனந்தசங்கரிக்கு நெருக்கடி! [Thursday 2025-07-17 07:00]
www.pungudutivuswiss.com
![]() கனடாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சராக உள்ள இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஹரி ஆனந்தசங்கரி, விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினருக்கு குடியுரிமை பெறுவதற்கு ஆதரவளித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். |
தேர்தல் முடிந்து 2 மாதங்களாகியும் 50 சபைகளில் ஆட்சியமைக்கவில்லை! [Wednesday 2025-07-16 16:00]
www.pungudutivuswiss.com
![]() உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடைபெற்று சுமார் 2 மாதங்கள் நிறைவடைந்துள்ள போதிலும், 50இற்கும் மேற்பட்ட சபைகளில் ஆட்சி அதிகாரத்தை அமைக்க முடியாமல் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. |
தமிழரசு உறுப்பினரின் இடைநிறுத்தம்- தடைவிதிக்க நீதிமன்றம் மறுப்பு! [Thursday 2025-07-17 07:00]
www.pungudutivuswiss.com
![]() இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து தம்மை இடைநிறுத்தி கட்சி எடுத்த முடிவுக்கு எதிராக இடைக்காலத் தடை உத்தரவு விதிக்கக் கோரி வலிகாமம் வடக்குப் பிரதேச சபை உறுப்பினர் பொன்னம்பலம் இராஜேந்திரம் தாக்கல் செய்த வழக்கில், இடைக்காலத் தடை விதிக்கும் கோரிக்கையை நிராகரித்து யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது |
16 ஜூலை, 2025
பிரான்சில் வரலாறு காணாத நிதிப் பற்றாக்குறை! வெடித்தது மக்கள் போராட்டம்!
www.pungudutivuswiss.com
பிரான்சில் நிலவும் கடுமையான நிதி நெருக்கடியைச் சமாளிக்கும்
பிரான்சில் நிலவும் கடுமையான நிதி நெருக்கடியைச் சமாளிக்கும்
வகையில், இரண்டு பொது விடுமுறை நாட்களை ரத்து செய்ய
செம்மணியில் பொம்மையுடன் மீட்கப்பட்ட எலும்பு கூடு சிறுமியினுடையது
www.pungudutivuswiss.com
செம்மணி மனித புதைகுழியில் நீல நிற புத்தகப்பை மற்றும்
பொம்மையுடன் மீட்கப்பட்ட எலும்பு கூட்டு தொகுதி 4 - 5 வயது
புதிய சட்டம் வரும் வரை பயங்கரவாத தடைச்சட்டம் நடைமுறையில் இருக்கும்! [Wednesday 2025-07-16 07:00]
www.pungudutivuswiss.com
![]() பயங்கரவாதத்தை எதிர்க்க புதிய சட்டம் இயற்றப்படும் வரை தற்போதைய பயங்கரவாத தடைச்சட்டம் செயற்படுத்தப்படும்.பயங்கரவாத தடைச்சட்டத்தை பொலிஸார் முறைகேடாக பயன்படுத்துவார்களாயின் பொதுமக்கள் நீதிமன்றத்தை நாடலாம் என அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். |
கனடா செல்வதற்கு 80 இலட்சம் ரூபாவை கொடுத்து ஏமாந்தவர் உயிரை மாய்த்தார்! [Wednesday 2025-07-16 07:00]
www.pungudutivuswiss.com
![]() கனடா செல்வதற்கு முகவரிடம் பணத்தை வழங்கிய நபர் ஒருவர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நிலையில் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். புங்குடுதீவு 4ஆம் வட்டாரத்தை சேர்ந்த 34 வயதுடைய செல்வராசா லிபாஸ்கரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் |
“அதிமுகவை மீட்டெடுப்பதற்கான சட்ட போராட்டம் தொடரும்” - ஓ.பி.எஸ் அதிரடி! [Tuesday 2025-07-15 07:00]
www.pungudutivuswiss.com
![]() அதிமுக- பாஜக கூட்டணி மீண்டும் அமைந்துள்ளதால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஓபிஎஸுக்கு பாஜக முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்று கூறப்படுகிறது. மேலும், அதிமுகவில் இனி ஒ.பி.எஸ் சேர்க்கப்பட மாட்டார் என எடப்பாடி பழனிசாமி உள்பட அதிமுக தலைவர்கள் உறுதியாக கூறு வருகின்றனர். இதனால், அதிமுக மீட்புக்குழு என்பதை விட தனியாக கட்சி ஆரம்பித்தால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தங்களுக்கென ஒரு குறிப்பிட்ட சீட்களை பெறலாம் என்ற யோசனையில் ஓ.பி.எஸ் இருப்பதாக தகவல் வெளியானது |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)