-
20 செப்., 2022
எங்கள் தலைவர் பிரபாகரன் ஐ. நா முன்றலில் இடிமுழக்கமாக முழங்கிகொண்டிருக்கும் தமிழர்கள்
இன்றைய தினம் (19.09.2022 ) சுவிஸ், ஜெனிவா,ஐ. நா ஈகைப்பேரொளி முருகாதசன் திடலில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் கவனயீர்ப்பு போராட்டத்தில் அனைத்து தமிழர்களும் ஒன்றிணைந்து ஒருமித்த குரலோடு தங்களின் கோரிக்கையை சர்வதேசத்திடம் எழுப்பிக்கொண்டுள்ளார்கள்
19 செப்., 2022
அரசியல் தீர்வு சமஸ்டி கட்டமைப்பில் அர்த்தமுள்ள அதிகார பகிர்வாக இருக்க வேண்டும்!
![]() அரசியல் தீர்வு என்பது ஒரு சமஸ்டி கட்டமைப்பிலான ஒரு அதிகார பகிர்வு அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும். அத்தகைய அதிகார பகிர்வையே ஏற்றுக் கொள்வோம். இந்தியாவும் அந்த நிலைப்பாட்டிலேயே உள்ளது என தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். |
7 வயதுச் சிறுமியை வன்புணர்ந்த 14 வயதுச் சிறுவன்! - போதையில் தடுமாற்றம்.
![]() யாழ்ப்பாணம் கோப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியொன்றில், ஹெரோயினுக்கு அடிமையான 14 வயதுச் சிறுவன் அதே பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமியை வன்புணர்ந்துள்ளார். அந்தப் பகுதியிலுள்ள முன்பள்ளி ஒன்றில் வைத்தே இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது |
தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்!
![]() தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் வவுனியா தமிழரசுக்கட்சி மாவட்ட அலுவலகமான தாயகத்தில், காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது |
புதிய வரைவு பிரேரணையின் உள்ளடக்கம் - தமிழ்க் கட்சிகள் அதிருப்தி!
![]() இலங்கை தொடர்பில் பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் தயாரிக்கப்பட்டிருக்கும் புதிய பிரேரணையின் உள்ளடக்கம் தொடர்பில் பெருமளவிற்குத் திருப்தியடைய முடியாது எனவும், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு வலியுறுத்தப்படாமை முக்கிய குறைபாடு எனவும் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் விசனம் வெளியிட்டுள்ளன |
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுக்கு 10 பேர் பலி
![]() யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பயன்படுத்தி இதுவரையில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 320 பேர் வரையில் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் , யாழ். போதனா வைத்தியசாலையில் போதைக்கு அடிமையானவர்களுக்கான சிகிச்சை மையத்தில் இரண்டு மாத கால பகுதிக்குள் 134 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்க பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன |
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களில் பெரும்பாலானோர் 18 வயதிற்கும் 23 வயதிற்கும் இடைப்பட்ட வயதுடையவர்களே என தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை யாழ்ப்பாணத்தில் அதிக போதைப்பாவனைக்கு உள்ளானவர்கள் வாழும் கிராமமாக சுமார் 20 கிராமங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனவே யாழ்ப்பாணத்தில் அதிகரித்துச் செல்லும் இந்தப் போதைப் பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்கான முறையான வேலைத் திட்டத்தை முன்னெடுப்பதற்கு அரசியல் தலைவர்கள், மதத் தலைவர்கள், சிவில் சமூகத்தினர் முன்வரவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
18 செப்., 2022
![]() ஒரே இடத்தில் கண்டெடுக்கப்பட்ட 440 உடல்கள்: கொந்தளித்த பிரதமர் ட்ரூடோ உக்ரைனில் ஒரே இடத்தில் 440 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதிவிட்டுள்ளார். ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்த இஸியம் நகரை உக்ரைன் தன் வசம் கொண்டுவந்துள்ளது. கிழக்கு நகரமான இஸியத்தில் 440க்கும் மேற்பட்ட உடல்கள் அடங்கிய பெரிய புதைவிடம் கண்டுபிடிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது |
17 செப்., 2022
இருபாலையில் புலிகளின் ஆயுதங்கள், தங்கம்?
![]() யாழ்ப்பாணம்- இருபாலை டச்சு வீதியில் உள்ள வீடொன்றின் வளாகத்துக்குள் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மற்றும் தங்க நகைகள் புதைக்கப்பட்டுள்ளதாக சந்தேகத்தில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. |
இடைநிறுத்தப்பட்டது அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம்!
![]() மகசின் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் முன்னெடுத்து வந்த உண்ணாவிரதப் போராட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. மகசின் சிறைச்சாலைக்கு சென்று கைதிகளை சந்தித்த வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா வழங்கிய வாக்குறுதியை அடுத்து உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக அரசியல் கைதிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது |
போர் குற்றத்தில் ஈடுபட்ட அனைத்து குற்றவாளிகளும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டு வரப்பட வேண்டும் -காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்க செயலாளர் ஆ.லீலாதேவி
இலங்கையில் இடம்பெற்ற போர் குற்றங்கள் குறித்து உள்ளக விசாரணைகள் மீதோ அல்லது உள்ளக பொறிமுறைகள் மீதோ எமக்கு எந்த நம்பிக்கையும் இல்லை, போர் குற்றத்தில் ஈடுபட்ட அனைத்து குற்றவாளிகளும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டு வரப்பட வேண்டும் என காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்க செயலாளர் ஆ.லீலாதேவி ஜெனிவாவில் தெரிவித்துள்ளார். |
தீர்மானம் குறித்து கலந்துரையாடல் - இந்தியா மௌனம்!
![]() சிறிலங்காவிற்கு எதிராக பிரித்தானியா தலைமையிலான நாடுகளால் கொண்டு வரப்படவுள்ள பிரேரணை தொடர்பில், பிரதான நாடுகளுடனான கலந்துரையாடல் ஒன்று ஜெனிவாவில் நேற்று நடைபெற்றுள்ளது |
அடுத்த அமைச்சர்கள் பட்டியலில் சி.வியும்!
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் வழக்கில் மைத்திரியும் சந்தேக நபர்! - நீதிமன்றம் உத்தரவு.
![]() ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான தனிப்பட்ட மனு தொடர்பில் ஒக்டோபர் 14ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது |