புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஜூலை, 2013

வட.மாகாண தேர்தலை வெளிப்படையாகவும் நேர்மையாகவும் நடத்த வேண்டும்! - ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தல்
இலங்கையின் வட. மாகாண சபைத் தேர்தலை வெளிப்படையாகவும், நேர்மையாகவும் நடத்தவேண்டும் என ஐரோப்பிய யூனியன் இலங்கை அரசுக்கு வலியுறுத்தியுள்ளது.
அவுஸ்திரேலியாவில் அகதிகளாக குடியேற படகில் வருபவர்களுக்கு அனுமதியில்லை: அவுஸ்.பிரதமர் - இலங்கை அரசு வரவேற்பு
அவுஸ்திரேலியாவுக்கு படகுகளில் சென்று அரசியல் தஞ்சம் கோருவார் நீண்டகாலம் அங்கு தங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என பிரதமர் கெவின் ரூட் தெரிவித்துள்ளார்.
யாழ். கத்தோலிக்க சபைக்குச் சொந்தமான 55 காணிகள் இராணுவத்தினரால் சுவீகரிப்படவுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ். மறைமாவட்ட ஆயர் 
தோமஸ் சவுந்தரநாயகத்தினால் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு வெள்ளிக்கிழமை கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. - See more at: http://www.thinakkural.lk/article.php?local/aghlycsrst7202f862d1345415160ecmpbfd267baa5fedfffb200567j1kuk#sthash.Bmk3bIfe.dpuf

கள் வல்லுறவு தந்தை கைது

பதினொரு வயது நிரம்பிய சிறுமியான தனது மகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியமை தொடர்பாக தந்தையை அப்புத்தளை

இராஜதந்திர ரீதியிலான வடமாகாண தேர்தலை நாம் வென்றெடுப்போம் - அரியநேத்திரன் எம். பி.

வட மாகாண சபையின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இத் தேர்தலில் போட்டியிடவில்லை. இவற்றுக்கும்

ஊவா மாகாண அமைச்சர் ஒருவரின் அச்சுறுத்தலால் பதுளை மஹியங்கனை மஸ்ஜிதுல் அரபா பள்ளிவாசல் இன்று மூடப்பட்டுள்ளது. இதனால் இன்று இடம்பெறவிருந்த ஜும்ஆ தொழுகைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

இன்று காலை அவ்விடத்திற்கு வருகை தந்த ஊவா மாகாண அமைச்சர் ஒருவர் குறித்த மஹியங்கனை பள்ளிவாசலில் ஜும்ஆ தொழுகையையோ அல்லது ஐந்து வேளை தொழுகைகளோ

4 மாணவர்கள் கடலில் மூழ்கி பலியான விவகாரம் :
மதுரை பள்ளி முதல்வர் கைது
கடலில் மூழ்கி மாணவர்கள் 4 பேர் உயிரிழந்த வழக்கில் பள்ளி முதல்வர் உட்பட 3 பேர்  கைது செய்யப் பட்டனர்.   
சீமான் தலைமறைவு
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு, கடந்த 2008ம் ஆண்டு ராமேஸ்வரத்தில் இறையாண்மைக்கு எதிராக பேசிய வழக்கில் வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது ராமநாதபுரம் நீதிமன்றம்.
சீமானுக்கு கைது வாரண்ட்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது ராமநாதபுரம் நீதிமன்றம்.
கவிஞர் வாலியின் இறுதி ஊர்வலம்: மழையில் நனைந்தப்படியே மயானம் வரை சென்ற வைரமுத்து உள்ளிட்ட திரையுலகினர் 
 


15 ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதி திரைப்பட உலகில் சாதனை படைத்த கவிஞர் வாலி 18.07.2013ல் காலமானார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்ச-க்காக சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கற்பகம் அவென்யூ முதல்
கனேடிய தமிழ் வேட்பாளர் கென் கிருபாவின் தேர்த ல்நிதி சேர்ப்பு கூட்டம் இன்று 
நண்பர்களே, இன்று மாலை இடம்பெறும் எனது தேர்தல் பிரச்சாரத்துக்கான நிதி சேகரிப்பி நிகழ்வில் கலந்து கொண்டு, உங்களால் இயன்ற நிதி உதவிகளை வழங்கி சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றேன்.

இடம்: Baba Banquet Hall , 3300 McNicoll Ave , Scarborough

காலம்: வெள்ளிக்கிழமை இன்று மாலை 7 - 9
தகாத உறவை வைத்திருந்ததாக குற்றம் சுமத்தி, கல்கமுவ பிரதேசத்தில் முஸ்லிம் பெண்ணொருவரின் தலைமுடியை கிராம மக்கள் வெட்டியுள்ளதாக தெரியவருகிறது.
குருநாகல் மாவட்டத்தில் கல்கமுவ மொன்னக்குளம் அல்- அஸ்னா ஜூம்மா பள்ளிவாசலில் வைத்து இந்த பெண்ணின் தலைமுடி வெட்டப்பட்டுள்ளது. இதன் போது தலையில் காயமடைந்த நிலையில் அந்த பெண்
சுவிஸில் இடம்பெற்ற மாவீரர்களின் நினைவுகள் சுமந்த மாபெரும் உதைப்பந்தாட்டப் போட்டி
சுவிட்சர்லாந்து சூரிச் வின்ரத்தூர் நகரில், இளம்றோயல் விளையாட்டுக் கழகம் நடாத்திய மூத்த தாக்குதல் தளபதி லெப். சீலன், வீரவேங்கை ஆனந்த், மூத்த உறுப்பினர் லெப். செல்லக்கிளி அம்மான்
<iframe width="560" height="315" src="//www.youtube.com/embed/y8pehYOWiis" frameborder="0" allowfullscreen></iframe>
மதுரை ஐகோர்ட் கிளையில் தமிழில் வாதாடலாம்! நீதிபதி அனுமதி!
மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் பகத்சிங் என்பவர், கடந்த வாரம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், தான் தாக்கல்
கவிஞர் வாலி மறைவு தமிழ் இனத்திற்கே ஒரு மாபெரும் இழப்பு: மு.க.ஸ்டாலின் இரங்கல
 

15 ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதி திரைப்பட உலகில் சாதனை படைத்த கவிஞர் வாலி 18.07.2013ல் காலமானார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக
மறைந்த அதிமுக எம்.எல்.ஏ., குடும்பத்தினருக்கு தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் ஆறுதல்
சேலம் மாவட்டம், ஏற்காடு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செ.பெருமாள் வியாழன் அன்று மாரடைப்பால் காலமானார். அவருடைய உடலுக்கு


வாலி தன் வரிகளையே தனக்கு இரங்கல் பாடலாக்கி இறந்து விட்டார்! கவிஞர் வைரமுத்து இரங்கல்!
கவிஞர் வாலியின் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:- 
நிரப்ப முடியாத வெற்றிடம்
தமிழகத்தின் முதுபெரும் பாடலாசிரியர் காவியக் கவிஞர் வாலியின் மறைவு பாட்டுலகில் இட்டு நிரப்பமுடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தி விட்டது. அழைத்த போதெல்லாம் அன்பாக பேசிமகிழ்ந்த ஒரு மூத்த நண்பரை நான் இழந்து விட்டேன்.
வாலி பெற்ற சில பெருமைகள் எந்தப் பாடலாசிரியருக்கும் எளிதில் வாய்க்காதவை. இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் பாடல் எழுதிய பாடலாசிரியர் வாலியாகத்தான் இருக்க
பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட்டால், தமிழ்த் தேசிய இராணுவமொன்றை அமைக்க முயற்சிக்கப்படும்!: பசில்
வட மாகாணத்திற்கு பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட்டால் தமிழ்த் தேசிய இராணுவமொன்றை அமைக்க முயற்சிக்கப்படும் என அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகங்கள் புலிகளின் கட்டுப்பாட்டில்: பீரிஸ்
சர்வதேச ஊடகங்கள் பல தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
வட மாகாண சபைத் தேர்தல்: த.தே.கூட்டமைப்பின் வேட்பாளர் பங்கீட்டு விபரம்
 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவிருக்கின்ற தனது வேட்பாளர் பங்கீட்டு விபரத்தை வெளியிட்டுள்ளது.
வடமாகாணத்தில் யாழ்ப்பாணத்தை தவிர கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களின் வேட்பாளர் பங்கீட்டு விபரம் பின்வருமாறு,
<iframe width="560" height="315" src="//www.youtube.com/embed/_L3lpj80ItU" frameborder="0" allowfullscreen></iframe>
மக்கள் திலகம் மறைந்தபோது கவிஞர் வாலி அவர்கள் "ஆனந்த விகடன்" (3/1/1988) இதழில் எழுதிய அஞ்சலிக் கவிதை

நான் யாரைப் பாடுவேன்?
பொன்மனச் செம்மலே! என் பொழுது புலரக் கூவிய சேவலே!
உனக்கென்று நான் எழுதிய முதல் வரியில் தான் - உலகுக்கு என் முகவரி தெரிய வந்தது!
என் கவிதா விலாசம் உன்னால்தான் விலாசமுள்ள கவிதை ஆயிற்று!
இந்த நாட்டுக்குச் சோறிடு முன்னமே என் பாட்டுக்குச் சோறிட்டவன் நீ!
என்னை வறுமைக் கடல்மீட்டு.., வாழ்க்கைக்கரை சேர்த்த படகோட்டியே!
கருக்கிருட்டில் என் கண்களில் தென்பட்ட கலங்கரை விளக்கமே!
நான் பாடிய பாடல்களை நீ பாடிய பிறகுதான் நாடு பாடியது - ஏழை எளியவர்களின் வீடு பாடியது!
இல்லையென்று இரப்போர்க்கு இல்லையென்று சொல்லாதவன் - இன்று
இல்லையென்று போனான் - இனி நான் யாரைப் பாடுவேன்?
புரட்சித் தலைவனே! நீ இருந்தபோது - உன் அடக்கத்தைப் பார்த்து நாடு தொழுதது..,
இன்று இறந்த பின்பு உன் அடக்கத்தைப் பார்த்து - நாடு அழுதது!
வைகை யாறும் பொன்னி யாறும் வற்றிப் போகலாம்;


PART3

PART 1


lAST RESPECT TO VAALI PART 2
இளையராசாவை குளிர்விக்கும் எண்ணத்தில் அவரது அன்பு தாயின் பெயரான சின்னதாய் அவள் என்று எழுதித் குவித்தார். உண்மையில் தளபதி படத்தில் இப்படி பெயரில் ஒரு கதாபாத்திரம் இல்லை .இதே போல பட்டணத்தில் பூதம் படத்தில் கண்ணதாசன் எழுதும் பாடல் வரும் அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி என்று .மீண்டும் காங்கிரசில் சேருவதற்கு காமராசரிடம் மறைமுகமாக கேட்பதாக அமையும் ,காமராசரின் அம்மா பெயர் சிவகாமி. படத்தில் சிவகாமி என்று பாத்திரமே இல்லை 
தமிழில் உயிரை ஓட்டும் என் இதயம் தொட்டு சென்ற கவிஞர் வாலியின் மறைவின் நினைவில் மீளாமல் துயரில் துவளும் பொழுதில் எழுதும் மழைத் துளியை பொறுத்தருள்வீர் அல்லது அள்ளி பரூகுவீர் என நம்புகிறேன் நண்பர்களே 
இசையமைப்பாளர் என்கிற முறையில் இளையராஜாவோடு எனக்குக் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதுண்டு. ஓர் இறையருள் மிக்க இசைக்கலைஞர் என்னும் வகையில், மாற்றுக்கருத்தே என்னுள் என் இதயத்தில் முளைவிட்டதில்லை. அவர் ஒரு மகாபுருஷர் என்கின்ற மதிப்பை இப்பிறவி முழுதும் நான் என் மனத்துள் பொன்னே போல் வைத்துக் காப்பேன்” - கவிஞர் வாலி “நானும் இந்த நூற்றாண்டும் (1995)
வாய்ப்புகள் சரிவர அமையாததால் பெட்டியை கட்டி பலசரக்கு கடைக்கே திரும்பி விடலாம் என்ற எண்ணத்துடன் போய்க்கொண்டிருக்கும் பொழுது,மயக்கமா கலக்கமா என்ற பாடல்வரிகளைக் கேட்டு புத்துணர்ச்சியுடன் தன் மனதை மாற்றிக்கொண்டு முயன்று.. இன்று வரை பல தலைமுறை கடந்து வென்று வரும் வாலியின் பங்களிப்பு மிக முக்கியமானது..
முதல்வர் கருணாநிதி பற்றி வாலி எழுதிய பாடலுக்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.
உன் மயக்கம் தீர்க்க வந்த

பெண் மயிலைப் புரியாதா?

தன் மயக்கம் தீராமல்

தவிக்கின்றாள் தெரியாதா?

என் உடலில் ஆசை யென்றால்

என்னை நீ மறந்துவிடு!

என் உயிரை மதித்திருந்தால்

வந்தவளை வாழவிடு!
திரையுலகம் நான்கு தலைமுறை-களைப் பேசுகிறது. பேசும் படங்கள் தோன்றிய 1931 முதல் 1948 வரையில் அமைந்த காலம், திரையுல-கின் முதல் தலைமுறை. 1949 முதல் 1970 வரை இரண்டாம் தலைமுறை, 1970 முதல்1990 வரை மூன்றாம் தலைமுறை. 1991 முதல் இன்றுவரை நான்காம் தலைமுறை என்று சொல்லலாம்.

வாலிபக் கவிஞர் வாலி - நினைவலைகள்


உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த வாலி, சிகிச்சை பலனளிக்காமல் இன்று மாலை காலமானார். அவருக்கு வயது 82 (18-07-2013).

நிலவும் தாரையும் நீயம்மா (அழகர் மலை கள்வன்)
    (கவிஞர் வாலி எழுதிய முதல் பாடல். ஒரு விழாவில் வாலி இப்படி குறிப்பிட்டார். "என்னுடைய முதல் பாடலை பாடியது பி.சுசீலா அவர்கள். தவிர, எனக்கு வாழ்வளித்த  எம்.ஜி.ஆர் படத்துக்கு  நான் எழுதிய பாடலை பாடியவர் பி.சுசீலா அவர்கள், அவர்கள் பாடிய ராசி இன்று வரை நான் திரை உலகில் இருக்கிறேன்"......  1988-இல் திரை உலகில் தன் முப்பதாவது வருடத்தை நிறைவு செய்தார் வாலி. அன்று அவர் இளையராஜாவிடம்,  "இன்று என் பாடலை பி.சுசீலா அவர்கள் பாட வேண்டும்" என விரும்பி கேட்டுக்கொண்டார். இளையராஜாவும் பி.சுசீலாவை அழைத்து "தென்றல் சுடும்" படத்துக்காக "தூரி தூரி தும்மக்க தூரி" என்ற பாடலை பாட வைத்தார். 
இளையராஜாவுக்காக வாலி எழுதிய முதல் பாடலை பாடியவரும் பி.சுசீலா தான். (கண்ணன் ஒரு கைக்குழந்தை))

கவிஞர் வாலி - வாழ்க்கை குறிப்பு


இயற்பெயர்: டி. எஸ். ரங்கராஜன், பிறப்பு: 29-.10-1931) தமிழ்க் கவிஞரும் தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரும் ஆவார் என்பது சொல்ல வேண்டிய அவசியம் இல்லை,

முட்டையிடும் பெட்டைக்கோழி

ஒரு முறை பாண்டிச்சேரி கவியரங்கத்தில் கம்பன் சைவமா? வைணவமா? என்ற தலைப்பில் கவிபாட, அரங்கம் முடிந்தவுடன் ஒரு முதுபெரும் தமிழ்ப்புதல்வர் வாலியிடம் “இவ்ளோ நல்லா கவிபாடும் நீங்க, சினிமா பாடல்களில் மட்டும் ஏன் வர்த்தக நோக்கோடு செயல்படறீங்க”ன்னு கேட்டார். அதற்கு வாலி சொன்ன பதில்:
இங்கே நான்
வண்ணமொழிப் பிள்ளைக்குக்
தாலாட்டும் தாய்;
அங்கே நான்
விட்டெறியும் எலும்புக்கு
வாலாட்டும் நாய்!
மேலும்…
எந்தப்பா சினிமாவில்
எடுபடுமோ? விலைபெறுமோ?
அந்தப்பா எழுதுகிறேன்;
என்தப்பா? நீர் சொல்லும்!
மோனை முகம் பார்த்து
முழங்கிட நான் முயற்சித்தால்
பானை முகம் பார்த்தென்
பத்தினியாள் பசித்திருப்பாள்
கட்டுக்குள் அகப்படாமல்
கற்பனைச் சிறகடிக்கும்
சிட்டுக்கள் நீங்கள்;
சிறியேன் அப்படியா?
மெட்டுக்குள் கருத்தரித்து
மெல்லவே இடுப்புநோகத்
துட்டுக்குத் தகுந்தவாறு
முட்டையிடும் பெட்டைக்கோழி!
என்று தன் மனதில் பட்டதை கவிதை நயத்தோடு படிக்கும் எல்லோருக்கும் எளிதாக புரியும் வகையில் உண்மையை பல கவியரங்குகளில் புலவர்களுக்கு சொல்லியதாக அவரின் “நானும் இந்த நூற்றாண்டும்” நூலில் குறிப்பிடுகிறார்

உலகம் சுற்றா “வாலி”பன்

DElhi
பத்தாயிரம் திரைப்பட பாடல்களும், ராமாயண பாரத காவியங்களை புதுக்கவிதையிலும் இன்ன பிற கவிதை நூல்களும் எழுதியிருக்கும் கவிஞர் வாலி அவர்கள், எனக்கு கிடைத்த உலகம் போதும், வெளிநாடுகளென்ன, இங்கிருக்கிற டில்லியே நான் பார்த்ததில்லை என்று ஒரு பேட்டியில் சொன்னார்.
தகவல் : ஸ்ரீகாந்த்.
தொடர்புடைய சுட்டி “
தமிழ் சினிமாவும் பாடல்களும்

கண்ணதாசனே !

Kannadasan 2
கண்ணதாசனே ! – என்
அன்பு நேசனே !
நீ
தாடியில்லாத தாகூர் !
மீசையில்லாத பாரதி !
சிறுகூடற் பட்டியில்
சிற்றோடையாய் ஊற்றெடுத்து
சிக்காகோ நகரில்
சங்கமித்த ஜீவ நதியே !
உனக்கு
மூன்று தாரமிருப்பினும் – உன்
மூலா தாரம் முத்தமிழே !
திரைப் பாடல்கள்
உன்னால் -
திவ்வியப் பிரபந்தங்களாயின !
படக் கொட்டகைகள்
உன்னால்
பாடல் பெற்ற ஸ்தலங்களாயின !
நீ
ஆண் வேடத்தில்
அவதரித்த சரஸ்வதி !
கண்ணனின் கைநழுவி 
மண்ணில் விழுந்த
புல்லாங்குழல் !
 
அயல் நாட்டில்
உயிர் நீத்த
தமிழ்நாட்டுக் குயிலே !
பதினெட்டுச்
சித்தர்களுக்கும் 
நீ
ஒருவனே
உடம்பாக இருந்தாய் !
நீ
பட்டணத்தில் வாழ்ந்த
பட்டினத்தார் !
கோடம்பாக்கத்தில்
கோலோச்சிக் கொண்டிருந்த
குணங்குடி மஸ்தானே !
நீ
தந்தையாக இருந்தும் 
தாய் போல்
தாலாட்டுக்களைப் பாடியவன் !
 
இசைத் தட்டுகளில் மட்டுமல்ல -
எங்கள் நாக்குகளிலும்
உன்
படப் பாடல்கள்
பதிவாகி யிருக்கின்றன !
உன்
மரணத்தால்
ஓர் உண்மை புலனாகிறது..
எழுதப் படிக்கத் தெரியாத
எத்துணையோ பேர்களில் -
எமனும் ஒருவன்.
அழகிய கவிதைப் புத்தகத்தைக்
கிழித்துப் போட்டுவிட்டான் !
- கவிஞர் வாலி
(கண்ணதாசன் மறைந்தபோது எழுதிய இரங்கல் கவிதை}

ஒபாமா உனக்கு ஒப்பாகுமா?

Kalingar
தமிழ் வணக்கம்,
தமிழினத் தலைவர் வணக்கம்.
எதற்கு தனித்தனியாய் இரு வணக்கம்?
வைப்பேன் என் தலைவனுக்கு
மட்டும் ஒரு வணக்கம்.
எவரேனும் எண்ணுவரோ
தலைவன் வேறாக
தமிழ் வேறாக ?
தலைவரல்லவா இருக்கிறார்
தமிழுக்கு வேராக.
கலைஞர் பெருமானே !
உன் வருகை
கண்டதும் தூக்குவேன்
என் இருகை.
உயரிய தலைவா
உனக்கு ஒரு வணக்கம் போட்டுவிட்டு
வாயை திறந்தால் தான்
என் வாய்க்கும்
கவிதை வாய்க்கும்.
என் பாட்டுக்கு
நீதான் பிள்ளையார் சுழி !
உன்னை முன் வைக்காமல்
என்ன எழுதினாலும்
என் பாட்டு வாங்கும் பெரிய சுழி !
அருமை தலைவா !
ஆண்டு 2007-ல்
எமனிடம் இருந்து நீ
என்னை மீட்டாய் !
அதற்கு முன்
ஆண்டு 2006-ல் – ஓர்
‘உமனிடம்’ இருந்து
தமிழ் மண்ணை மீட்டாய் !
 
தேர்தலுக்கு தேர்தல்
5 விரல்களை அகலக்காட்டி,
அஞ்சு அஞ்சு என்று
அயலாரை ஓட்டி,
5 முறை அரியணை ஏறிய
அஞ்சுக செல்வா !
தேர்தல் வரலாற்றில் – உன்னை
வெகுவாக விமர்சனம் செய்ய
டில்லியில் ஒரு கோபால்சாமி
திருமங்கலத்தில் ஒரு கோபால்சாமி.
நீயோ
இந்த 2 கோபால்சாமிகளையும்
புறம் தள்ளிய
கோபாலபுரத்து சாமி !
எனவேதான்
கும்மாளமிட்டு – உன்னை
கொண்டாடுகிறது
இந்த பூமி !
அய்யா !
50 ஆண்டு காலம் – உன்
சேவடிபட்ட சபை
சென்னை சட்டசபை !
 
நாவில் தமிழ் ஏந்தி – நீ
நற்றமிழ் இட்ட சபை !
முதல் முதல்
தேர்தல் குளத்தில்
குளிக்க நீ தொடங்கிய ஊர்தான்
குளித்தலை !
குளித்தலைக்கு பிறகு
இதுவரை .. ..
குனியா தலை
உன் தலை !
இனியும் குனியாது
வெற்றியை குவிக்கும்
என்பதும் உன் தலை.
சாதாரணமாய் இருந்து
சரித்திரம் படைத்தாய்.
அய்யா !
அந்த வகையில் நீ ஒரு ஒபாமா !
சரித்திரம் படைத்த பின்பும்
சாதாரணமாக இருக்கிறாய்
அந்த வகையில் உனக்கு
ஒபாமா ஒப்பாகுமா?
உன்னை விட்டு
வலது போனால் என்ன ?
இடது போனால் என்ன ?
மேலே விழுந்த நரி
பிடுங்காமல் போனால் சரி.
நீ எப்போதும் போல் சிரி.
உன்னிடம் உள்ளது
நடு நிலைமை
நடுநிலைமை தான்
நல்ல தலைமை !
கலைஞர்கோனே !
கருப்பு கண்ணாடி அணிந்த
கவி வெண்பாவே !
நீயே உனக்கு நிகர்.
நீ நகர்ந்தால்
உன் பின்னே
நகர்கிறது நகர் !
நிஜம் சொன்னால்
ரஜினியை விட
நீயொரு வசீகரமான ‘பிகர்’ !
 
நாவினிக்க நாவினிக்க
உன்னை பாடியே
என் உடம்பில்
ஏறிப்போனது சுகர் !
நீ எங்கள் கிழக்கு !
உனக்கு என்றும் இல்லை மேற்கு.
நீ வடக்கு வழிபடும் தெற்கு !
நம்மொழி செம்மொழி
அதனை அங்கீகரிக்காது
நாள் கடத்தியது நடுவண் அரசு.
நீ குட்டினாய்
உடனே குனிந்தது
அதன் சிரசு !
 
அதுபோல்
தமிழனின் அடையாளங்களை
வட்டியும் முதலும் சேர்த்து
வள்ளலே நீதான் மீட்டாய் !
தரை மீனை திரும்ப
தண்ணீரில் போட்டாய் !
அதனால் தான் அய்யா – உன்னை
அவருக்கு நிகர் அவர் – தமிழனை
துன்பம் தீண்டாது மீட்கும்
தடுப்புச் சுவர் !
மையம் ஏற்கும் வண்ணம்
உன்னிடம் உள்ளது பவர் !
அத்தகு பவர் – உன்போல்
படைத்தவர் எவர் ?
அமைச்சர் பெருந்தகை
ஆற்காட்டாரிடம் உள்ள பவரால்
வீட்டு விளக்கு எரியும்
நடுரோட்டு விளக்கு எரியும்.
உயரிய தலைவா
உன்னிடம் உள்ள பவரால் தான்
நாட்டு விளக்கு எரியும் – நற்றமிழ்
பாட்டு விளக்கு எரியும்.
குப்பன், சுப்பன் வாழும் குப்பங்கள்
ஓயாமல் உன்னால் தான் ஒளிர்கிறது !
அடுப்பு விளக்கு
அன்பு விளக்கு
அமைதி விளக்கு
அறிவு விளக்கு என
பல்விளக்கை இன்று
உன்னை பணித்து வாழ்த்தி
சொல்வேன் போய் நீ பல் விலக்கு என்று.
தமிழா என் நண்பா
உனக்கு தருவேன்
கேள் ஒரு வெண்பா !
- கவிஞர் வாலி
(வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற தமிழர் பெருவிழா நிகழ்ச்சியில்)

சினிமாவில் எது வேண்டுமானாலும் நடக்கும். அதை தீர்மானிப்பவன் இறைவன்தான். ‘உனக்கு பாட்டு எழுத வராது; ஊரில் நிலம் இருந்தா போயி விவசாயம் பண்ணு’ என்று என்னை விரட்டியவர் எம்.எஸ்.விசுவநாதன். பிறகு அவர் இசையில் 3 ஆயிரம் பாடல்களை எழுதினேன்.
‘சந்திரலேகா’ படத்தில் ராஜாவின் செருப்பை எடுத்து வைக்கும் வேலையாள் வேடம் கூட மறுக்கப்பட்ட சிவாஜி கணேசன் பிற்காலத்தில் நடிகர் திலகமாக வளர்ந்தார். இப்படி சினிமாவில் ஜெயிக்க காலம் நேரம் கூடி வரவேண்டும்.
சில இயக்குனர்கள் நான் நினைத்தது வரவில்லை என்பார்கள். ஒரு இயக்குனர் ‘கன்னம்’ என்ற சொல்லுக்கு எளிமையான வார்த்தையாகப் போடுங்கள் என்றார். ‘கன்னம்’ என்பதே எளிமையானது தான் என்று சொல்லிப்பார்த்தேன். அவர் கேட்கவில்லை. கவிஞர் அப்துல்ரகுமானிடம் இதை கூறினேன். ‘கேட்டவன் கன்னத்தில் ஒன்று போட வேண்டியதுதானே’ என்றார்.
- விழாவொன்றில் கவிஞர் வாலி
வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள்
தமிழ் சினிமாவின் எவர்க்ரீன் வாலிபன். பக்தி  இலக்கியம் எழுதினால் ஸ்ரீராமன்.பாட்டெழுத வந்துவிட்டால்  மாயக்கண்ணன். ஸ்ரீரங்கம் தந்த தமிழ்ச் சுரங்கம் வாலியின்சீக்ரெட் சாக்லேட்ஸ்.....
திருச்சிக்கு அருகில் திருப்பராய்த்துறைவாலியின் சொந்த ஊர். ஸ்ரீரங்கத்துக்குவந்து குடியேறிய ஸ்ரீனிவாச அய்யங்கார் – பொன்னம்மாளின் மகன் வாலி. படித்தது எஸ்.எஸ்.எல்.சி. பிறகுசென்னை ஓவியக் கல்லூரியில் ஒரு வருடப் படிப்பு!.
வாலி எப்பவும் உடுத்துவது நூலாடையாக இருந்தால் வெள்ளைசில்க்காக இருந்தால் சந்தன நிறம்இவை தவிர வேறு விருப்பம் இல்லை!
`பொய்க்கால் குதிரை, `சத்யா’, `பாத்தாலே பரசவம்’, `ஹே ராம்’, என நான்கு படங்களில் நடித்து இருக்கிறார் வாலி!.
`எழுதப் படிக்கத் தெரியாத எத்தனையோ பேர்களில் எமனும் ஒருவன். ஒரு அழகிய கவிதைப் புத்தகத்தைக் கிழித்துப் போட்டுவிட்டான்’ –கண்ணதாசன்இறந்தபோது வாலி எழுதிய கண்ணீர் வரி இது!
அம்மாபொய்க்கால் குதிரைகள்நிஜ கோவிந்தம்பாண்டவர் பூமிகிருஷ்ண விஜயம்அவதார புருஷன் என 15 புத்தங்கள் எழுதி இருக்கிறார். சிறுகதை,கவிதைஉரைநடை என எல்லா வகையும் இதில் அடக்கம்!
எவ்வளவோ அழைப்புகள் வந்தும் எந்த வெளிநாட்டுக்கு சென்றதில்லை கவிஞர் வாலிபாஸ்போர்ட்டே இல்லாத பாட்டுக்காரர்!
வாலியின் காதல் மனைவி ரமணத்திலகம். இந்தத் காதலை ஊக்குவித்துத் திருமணம் செய்யத் தூண்டியவர்கள்நடிகைகள் பத்மினிஈ.வி.சரோஜா இருவரும் ரமணத்திலகம்பத்மினிஈ.வி.சரோஜா மூன்று பேரும் வழுவூர் ராமையாப்பிள்ளையின் மாணவிகள். சமீபத்திய வாலியின் பெரும் துயர் மனைவியின் மறைவு!
வாலி வீட்டில் தயாராகும் தோசைமிளகாய்பொடி ரொம்ப்ப் பிரபலம். `இன்று தோசைமிளகாய்ப் பொடிக்கு வழியிருக்கா’ என்று அடிக்கடி எம்.ஜி.ஆர்.வந்துவிடுவாராம்!
வாலி இது வரை திரையிசைப் பாடல்களாக 15, 000-க்கு மேல் எழுதி இருக்கிறார். தனிப்பாடல்கள் கணக்கில் அடங்காது. இன்றும்  எழுதிக் கொண்டே இருப்பதால்கணக்கு இன்னும் மேலே போதும்!
1966 –ல் வாங்கிய எம்.எஸ்.கியூ 1248 பியட்  இன்னும் ஞாபகங்களைச் சுமந்துகொண்டு நிற்கிறது. மறக்க முடியாமல்புதிதாக மாற்றிக் கொள்ளத்துணியாமல் வாசலில் நிறுத்தி வைத்திருக்கிறார் வாலி!
சினிமாவுக்குப் பாட்டெழுத அழைத்து வந்தவர் டி.எம்.செளந்தர்ராஜன். ஸ்ரீரங்கத்தில் இருக்கும்போதே போஸ்ட்கார்டில் டி.எம்.எஸ்ஸீக்கு எழுதி அனுப்பியது தான் மிகவும் வெற்றி பெற்ற `கற்பனை என்றாலும் கற்சிலைஎன்றாலும் கந்தனே உனை மறவேன்’ பாடல் இதை அனுபவித்துப் பாடியிருப்பார் டி.எம்.எஸ்!
ஆரம்பத்தில் தங்கச் சங்கிலிமோதிரம்ரோலக்ஸ் வாட்ச் சகிதம் இருப்பார். இப்போது எல்லாம் தவிர்த்துவிட்டுஎளிமையை அணிந்திருக்கிறார்!
17 திரைப்படஙகளுக்கு திரைக்கதை வசனம் எழுதியிருக்கிறார் வாலிஅவற்றில் கலியுகக் கண்ணன். காரோட்டிக் கண்ணன்ஒரு செடியின் இரு மலர்கள். சிட்டுக் குருவி ஒரே ஒரு கிராமத்தில் இப்படி எழுதிக் கொண்டே போகலாம். மாருதிராவோடு சேர்ந்து டைரக்ட் செய்த ஒரே படம் வடை மாலை!
1966 –ல் `மணிமகுடம்’ படப்பிடிப்பின் போது எஸ்.எஸ்.ஆர். அறிமுகப்படுத்திய கலைஞர் நட்பு 44 வருடங்கள் தாண்டியும் தொடர்கிறது. `அவதார புருஷ்ன்விகடனில் வெளிவந்த காலங்களில் அதிகாலைகளின் முதல் தொலைபேசிஅழைப்பு கலைஞருடையது!
எம்.ஜி.ஆர்.-சிவாஜி இருவருக்கும் விருப்பமான கவிஞர். எம்.ஜி.ஆர்.எப்பவும்`என்ன ஆண்டவனே’ என்று அழைப்பார்.சிவாஜிக்கு வாலி `என்ன வாத்தியாரே’!
பத்மஸ்ரீபாரதி விருது முரசொலி அறக்கட்டளை விருதுகலைமாமணி விருது எனப் பல சிறப்புக்களைப் பெற்றிருக்கிறார் வாலி. செம்மொழிஉலகத்தமிழ்மாநாடு போன்றவற்றின் இவரது பங்கும் உண்டு!
ஸ்ரீரங்கத்தில் இருக்கும்போது நெருங்கிய நண்பர்கள் பட்டாளத்தில் அகிலன்,சுகிதிருலோக சீதாராம்,ஏ.எல்.ராகவன்,ஸ்ரீரங்கம் நரசிம்மன்ராமகிருஷ்ணன்ம்பின்னாளில் சுஜாதாவான ரங்கராஜனும் அடக்கம்!
வாலி தனிமை விரும்பி அல்லஎவ்வளவு கூட்டத்தில் நண்பர்களோடு இருந்தாலும் ஒரு தாளை உருவிக் கொடுத்தால் கவிதை வந்து விடும்!
வெற்றிலை பாக்கு போடுவதை 15 வயதில் ஆரம்பித்து 76 வயது வரை தொடர்ந்தார். பிறகு திடீரென நிறுத்திவிட்டார். பல வருட வெற்றிலைப் பழக்கத்தை விட்டதை இன்றைக்கும் ஆச்சர்யமாகச் சொல்வார்கள்!
வாலியின் இஷ்ட தெய்வம் முருகன்எப்பவும் அவரின் உதடுகள் `முருகாஎன்று தான் உச்சரிக்கும். முருகன் பாடல்கள் என்றால் எழுதுவதற்கு முதலிடம் தரத் துடிப்பார்!
வாலி கவிதை அளவுக்கு கிரிக்கெட் பிரியர். ஒவ்வொரு விளையாட்டு வீரரின்வரலாறு அவர்களின் திறன்,ஸ்டைல் எல்லாவற்றைப் பற்றியும் விலாவாரியாகப் பேசுவார்போட்டியின் முடிவைத் தீர்மானிக்கிற வரைகூட அவரால் முடியும்!
எங்கேயிருந்தாலும் ஆங்கிலப் புத்தாண்டன்று வாலியைத் தேடிக் கண்டுபிடித்து,ஆசி பெற்றுவிடுவார் ஏ.ஆர்.ரஹ்மான்இன்னும் பழநி பாரதிநா.முத்துக்குமார்,பா.விஜய் நெல்லை ஜெயந்தாஎன எல்லாக் கவிஞர்களும் சங்கமமாகும் இடம் வாலியின் இல்லம்!
2005 –ல் ராஹ் டி.வி.வாலி 12,000 பாடல்கள் எழுதியதற்காக `என்றென்றும் வாலிஎன விழா எடுத்து 100 சவரன் தங்கம் பரிசு அளித்தார்கள்வராத நட்சத்திரங்களைடைரக்டர்களை எண்ணி விடலாம். திரையுலகின் பெரிய நிகழ்வு அது!
வாலியின் 50 ஆண்டு கால நண்பர் ஜெயகாந்தன். இருவருக்கும் உள்ள நெருக்கத்தைப் பார்ப்பவர்கள் ஆச்சர்யப்படுவார்கள்!
ஸ்ரீரங்கத்தில் `பேராசை பிடித்த பெரியார் என்னும் சமூக நாடகத்துக்கு`இவர்தான் பெரியார்! இவரை எவர்தான் அறியார்என்ற பாடல் எழுதி பெரியாராலே பாராட்டப்பெற்ற அனுபவம் வாலிக்கு உண்டு!

ad

ad