புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 பிப்., 2015

டெல்லியில் முழு மெஜாரிட்டியுடன் பா.ஜ.க. ஆட்சி அமையும்: ராஜ்நாத் சிங், கிரண் பேடி

 டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைய இன்னும் சில மணி நேரமே இருக்கும் நிலையில் டெல்லியில் முழு மெஜாரிட்டியுடன் பா.ஜ.க. ஆட்சி அமையும் என மத்திய உள்துறை மந்திரியும் அக்கட்சியின் முன்னாள் தேசிய தலைவருமான ராஜ்நாத் சிங் மற்றும் டெல்லி முதல் மந்திரி வேட்பாளராக போட்டியிடும் கிரண் பேடி உள்ளிட்டோர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

உத்தரப்பிரதேசம் மாநில தலைநகர் லக்னோவில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்த ராஜ்நாத் சிங், டெல்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. முழு மெஜாரிட்டி பெறும் என்று நம்புவதாக குறிப்பிட்டார்.

இதேபோல், டெல்லியின் மால்வியா நகர் தொகுதியில் இன்று வாக்களித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கிரண் பேடி, ‘இன்றைய நாள் வரலாற்று சிறப்பு மிக்க ஒரு நாளாகும். டெல்லி மக்கள் தங்களுக்கு எப்படிப்பட்ட டெல்லி தேவை? என்று தீர்மானிக்க வேண்டிய நாளுமாகும்.

சுத்தமான, பாதுகாப்பான, வல்லமை வாய்ந்த, பெண்களுக்கு மதிப்பளிக்கும் டெல்லி தங்களுக்கு தேவை என்றும் விரும்பும் மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேவந்து வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இந்த தேர்தலின் மூலம் இரண்டு தலைவர்களை தேர்வு செய்யும் வாய்ப்பு வாக்காளர்களுக்கு கிடைத்துள்ளது. எனது வெற்றி என்பது பிரதமர் நரேந்திர மோடியின் தலைமை பண்புக்கும் கிடைத்த வெற்றியாக அமையும்' என தெரிவித்தார்.

ad

ad