புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 டிச., 2012

மாணவர்கள் கந்தகடுவ முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டமை திட்டமிட்ட ஒடுக்குமுறை: சித்தார்த்தன்

பல்கலைக்கழக மாணவர்களில் நால்வர் தடுப்புக் காவலுக்காக வெலிகந்தை கந்தகடுவ புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமையானது அரசின் திட்டமிட்ட மாணவர்கள் மீதான
ஒடுக்குமுறையாகும் என்று தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் (புளொட்) தலைர் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.





கைதான மாணவர்களின் விடுதலை தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவதுஇ
அண்மையில் கைதான பல்கலைக்கழக மாணவர்களில் நால்வர் தடுப்புக் காவலுக்காக வெலிகந்தை கந்தகடுவ புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமையானது அரசின் திட்டமிட்ட மாணவர்கள் மீதான ஒடுக்குமுறையாகும்.

ஜனநாயக உரிமைகளை மறுதலித்து எமது இனத்தின் மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறையின் தொடர்ச்சியாகவே இச் செயல்கள் உள்ளன.

யுத்தம் முடிவடைந்துவிட்டது. இயல்புநிலையும் ஜனநாயகமும் மீளவும் வடக்கு கிழக்கில் நிலைநாட்டப்பட்டுள்ளது எனக் கூறும் அரசுஇ பல்கலைக்கழக மாணவர்களை தடுப்பு முகாமுக்கு அனுப்புவதன் மூலம் மாணவர்கள் மத்தியில் ஒரு நிச்சயமற்ற தன்மையையும் பெற்றோர்கள் மத்தியில் ஒரு பதட்டமான நிலையையும் ஏற்படுத்தியிருக்கின்றது.

யுத்த சூழ்நிலைகளில் எவ்வளவோ இழப்புகளுக்கும்இ துன்பங்களுக்கும்இ அர்ப்பணிப்புகளுக்கும் மத்தியில் தான் மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதற்கு சந்தர்ப்பத்தை பெற்றார்கள்.

இப்படியான அடக்கு முறைகள் மாணவர்களின் கல்வியினை பாழாக்கிவிடும். சமுதாயத்தில் மேன்மை நிலையயை எட்டமுடியாத சூழல் வலிந்து உருவாக்கப்பட்டால் மாணவர்கள் விரக்திநிலைக்கே தள்ளப்படுவார்கள்.

உரிமைகளுக்கு குரல் கொடுப்பதையும்இ இயல்புநிலைகள் எதையும் பாதிக்காமல் தங்களுடைய விடுதிகளியேலே மிக அமைதியான உணர்வுகளை வெளிப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகளையும் அரசு அடக்க முற்பட்டமையானது இன்று ஒரு பூதாகாரமான பிரச்சினையாக உருவாகியிருக்கிறது.

எனவே இந்த நிலைமைகளை நீடிக்க விடாமல்இ மாணவர்கள் தமது கல்விச் செயற்பாடுகளை தொடர்வதற்கு அனுமதியளித்து அவர்களை உடனடியாக விடுதலை செய்ய அரசு முன்வரவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ad

ad