ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு: ஆந்திர எல்லையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் 30 பேர் கைது
இலங்கை அதிபர் ராஜபச்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆந்திர எல்லை புத்தூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தி தொடர்பாளர்
வன்னியரசு தலைமையில் 30 பேர் மறியல் செய்தனர். அப்போது அவர்களை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 30 பேரும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நடத்தியஇந்த திடீர் போராட்டத்தால் பரபரப்பு நிலவியது. |