புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 மார்., 2013



கடந்த 2011ம் ஆண்டு முதல் தமது இரு பிள்ளைகள் காணாமல் போயுள்ளதாக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
காணாமல் போனவர்களில் ஒருவர் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளி என்றும் மற்றயவர் செஞ்சோலையில் இருந்து கல்வி கற்றவர் என்றும் முறைப்பாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சி ஆனைவிழுந்தானைச் சேர்ந்த இ.ரோஹினி (வயது 23) கிளிநொச்சி திருநகரைச் சேர்ந்த கே.வினோதினி ஆகிய இருவருமே இவ்வாறு காணாமல் போனவர்களாவர்.
இ.ரோஹினி, தொழில் நிமித்தம் கிளிநொச்சியில் தொழிற்பயிற்சி நிலையம் ஒன்றில் குழாய் பொருத்தும் பயிற்சியில் ஈடுபட்டுவந்தபோது கடந்த 2011 ஜூன் மாதம் தொடக்கம் இருவரும் காணாமல் போனதாக யுவதிகளின் தாயார் முறைப்பாடு செய்துள்ளார்.
தனது மகள் 2010ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து விடுவிக்கப்பட்டு ஆனைவிழுந்தான் பகுதியில் வசித்து வந்ததாகவும் இது தொடர்பில் அக்கராயன் பொலிஸ் நிலையத்திலும் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் கவனம் செலுத்தப்படாத நிலையிலேயே மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டதாகவும் ரோஹினியின் தாயார் குறிப்பிட்டுள்ளார்.

ad

ad