புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 மார்., 2013


போர்க்குற்ற விசாரணைகள் கருணாவிடம் இருந்துதான் ஆரம்பிக்க வேண்டும்!- மனித உரிமைகள் கண்காணிப்பகம்
இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலத்தில் மிக மோசமான முறையில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனிடமிருந்தே போர்க்குற்ற விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் புலிகள் இயக்க அமைப்பினருடன் தொடர்பு கொண்டுள்ளதாகவும் அவர்கள் மீது முதலில் போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கருத்து வெளியிட்டிருந்தார்.
இது குறித்து மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய நாடுகளுக்கான பணிப்பாளர் பிரட் அடம்ஸ், இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கருணா அம்மானின் கருத்தை வைத்துக் கொண்டு அவரை சுதந்திரமாக செயற்பட விட முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் கருணா அம்மான் உறுப்பினராக இருந்த போது, பல குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டுள்ளார். எனவே இலங்கை அரசின் போர்க்குற்ற விசாரணை அவரிடமிருந்தே ஆரம்பிக்க வேண்டும்.
1990ம் ஆண்டு ஜூன் மாதம் 400 தொடக்கம் 600 பொலிஸார் விடுதலைப் புலிகள் அமைப்பினரிடம் சரணடைந்ததாகவும், அவர்களில் பலர் கருணாவின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த போது சித்திரவதை செய்யப்பட்டதாகவும் சிங்கள, முஸ்லிம் பொலிஸர் கொலை செய்யப்பட்டதாகவும் மனித உரிமைக் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
எனினும் பீபீசிக்கு பேட்டியளித்துள்ள கருணா, அந்த சம்பவங்களோடு தன்னை தொடர்பு படுத்தாமல் கருத்து வெளியிட்டுள்ளதாகவும் பிரட் அடம்ஸ் தனது அறிக்கையில் சுட்டிக் காட்டினார்.
1990ம் ஆண்டு 75 முஸ்லிம்கள் படுகொலை மற்றும் மட்டக்களப்பில் 200 பொதுமக்கள் படுகொலை என்பவற்றுடன் கருணா குழுவினர் தொடர்பு இருப்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் சிறுவர்களை படையில் இணைத்துக் கொண்டதாக 2004ம் ஆண்டு மனித உரிமைகள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் வீடு வீடாகச் சென்று சிறுவர்களை படையில் சேர்க்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டமைக்கு கருணா முக்கிய பங்கு இருப்பதாகவும் இன்றைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் வடக்கு, கிழக்கில் குடும்பங்களை அச்சுறுத்தி பாடசாலை செல்லும் சிறுவர்களை கடத்தியதாக மனித உரிமைக் கண்காணிப்பகம் குற்றஞ்சாட்டியுள்ளது.
கருணா தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து விலகிய பின்னரும் இலங்கை அரச படைகளுடன் இணைந்து குற்றச் செயல்களில் செயற்பட்டதாகவும் யுத்த காலத்தில் மோசமான குற்றச் செயல்களில் ஈடுபட்ட கருணா, இப்போது அரச வரப்பிரசாதங்களை அனுபவித்து வருவதாகவும் பிரட் அடம்ஸ் குறிப்பிட்டார்.

ad

ad