புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 மார்., 2013


நேர்படப் பேசு’ நிகழ்ச்சியில் நடந்தது என்ன?
அரசியல்வாதிகள், பல்துறை வல்லுனர்கள், போன்றோருடன் நேர்படப்பேசி, உண்மைகளை உலகத்தமிழர்கள் அறியும் வகையில் நடுநிலையுடன் நேரலையாக வழங்கி வரும் புதிய தலைமுறை தொலைக்காட்சி அதற்காக எதிர்கொள்ளும் பிரச்னைகள் எத்தகையவை என்பது உங்களில் பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

உங்களுக்காக புதிய தலைமுறை எத்தகைய சவால்களை எதிர்கொள்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக 27-03-2013 அன்றைய நேர்படப்பேசு நிகழ்ச்சி அமைந்தது.
தீவிரவாத அமைப்புகளின் துணையோடு மாணவர் போராட்டத்தைத் தூண்டுவதாகவும், இதன் விளைவாக சிபிஐ சோதனை போன்றவற்றை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மத்திய முன்னாள் அமைச்சருமான திரு. ஈ வி கே எஸ் இளங்கோவன், நமது அரங்கத்திலேயே, புதிய தலைமுறை குழுமத்திற்கு அச்சுறுத்தல் விடுத்தார்.
இதனை பார்த்த ஏராளமான நேயர்கள் மின்னஞ்சல் மூலமாகவும் தொலைபேசி வாயிலாகவும் திரு இளங்கோவனின் குற்றச்சாட்டுகளுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுபோன்ற உண்மையற்ற குற்றச்சாட்டுகளுக்கு அஞ்சாமல் புதிய தலைமுறை தொடர்ந்து தனது உண்மையைச் சொல்லும் சமூகக் கடமையை துணிவுடன் ஆற்றவேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதுபோன்ற அச்சுறுத்தல்கள் புதிய தலைமுறையின் துணிவை ஒருபோதும் குறைத்துவிடாது என்பதையும் உங்களது ஆதரவுடன் புதிய தலைமுறை எத்தகைய மிரட்டல்களுக்கும் அஞ்சாமல் தொடர்ந்து நடுநிலையோடு சமூகக் கடமையாற்றும் என்பதையும் உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறோம்.
காணொளி:

ad

ad