புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஆக., 2013


மாற்று அரசியலுக்கான இளையதலைமுறையின்
கருத்துக்களம் : வைகோ பேச்சு

 

 மாற்று அரசியலுக்கான இளையதலைமுறையின் கருத்துக்களம் ஈரோட்டில் இன்று காலை 10மணிக்கு சக்தி திருமண மண்டபத்தில்  தொடங்கியது.   மாலை 5 மணிக்கு தலைவர் வைகோ உறை ஆற்றினார் 



வைகோ பேசும்போது, ’’உரையாற்ற என்னை அழைத்தபோது கரிகால் சோழன் புத்தகத்தை அளித்தீர்கள். அது பொருத்தம்தான். என்னை கரிகால் சோழனாக சித்தரித்து அல்ல, உங்களுக்கு பொருத்தமாக அந்த நூல் அமைந்துள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நம் நீதியை நிலைநாட்டிய வரலாறு நமக்குள்ளது.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்றாகும் என்ற சிலப்பதிகாரம் நீதியை நிலைநாட்டிய நூலாகும். அப்படி நீதியை நிலைநாட்டிய மற்றொரு வழக்கு ஒருவன் பெயர் மாணிக்கம், மற்றொருவன் பெயர் முத்து. முத்துவின் நிலத்தை மாணிக்கம் வாங்கினான். அவன் உழுகின்றபோது அந்த நிலத்தில் விலை உயர்ந்த புதையல் இருந்தது. (கதை) இளையன் இவன் என்று எண்ணி விடாதே. ஆகவே, இளையவர்களாம் இணையதள நண்பர்கள் சேர்ந்து முன்னெடுக்கும் மாற்றத்தை எவரும் எளிதில் நகைத்துவிட முடியாது.
                மாற்றம்தான் மாற்று அரசியல். அனைத்துத் துறைகளிலும் மாற்றம் வளர வேண்டும். இருபது ஆண்டுகளுக்கு முன்பே திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து நான் தூக்கி எறியப்பட்டபோது திராவிட இயக்கத்தில், அரசியலில் மாற்றம் வரவேண்டும் என்பதற்காகவே மறுமலர்ச்சி திமுக என இயக்கத்திற்கு பெயர் சூட்டினோம். மறுமலர்ச்சி அவ்வளவு எளிதில் கிடைத்து விடாது. ஏன்? எதற்கு? என்று கேள்வி கேட்கும் ஞானத்தை கற்றுத் தந்த அறிவாசான் பெரியார் பிறந்த மண்ணில் கருத்துக் களம் நடைபெறுகிறது. கைதட்டல்கள் எழவில்லை என்ன சகோதரி ரொஹையா பேசினார். பின்னர் செவிப்பறை கிழியும் வகையில் நீங்கள் கைதட்டினீர்கள். கைதட்டல்கள் அதிகம் கிடைத்தால் அது சில நேரம் ஆபத்தாகிவிடும்.
                திருச்சியிலே நடந்த திமுக மாநில மாநாட்டில் உலகை உலுக்கிய புரட்சிகள் என்னும் தலைப்பில் நான் பேசிய பேச்சுக்கு எழுந்த கையொலிகள் ஏராளம். எமது கருத்துக்களை எடுத்துச் செல்ல இளம் தலைமுறையினர் வந்து விட்டீர்கள். ஆகவேதான் நானும், அவைத் தலைவரும் உங்களை பேசவைத்துவிட்டு கீழ் அமர்ந்து கேட்டோம். சரி மறுமலர்ச்சி திமுகவின் நிலைப்பாடு என்ன? என்ற பெரும் கருத்து நிலவும் நேரத்தில் இந்தக் கருத்துக் களம் நடந்து கொண்டிருக்கிறது. மிகுந்த கட்டுப்பாடுகளுடன் நீங்கள் மிகவும் நேர்த்தியாக உரையாற்றி இருக்கிறீர்கள்.
மறுமலர்ச்சி திமுகவிற்கு இது முக்கியமான காலகட்டம். இப்போது உடனடியாக இந்திய அரசியலில் மாற்றம் உருவாக வேண்டும். ஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்த காங்கிரஸ் தூக்கி எறியப்பட வேண்டும். கடந்த கால அரசியல் நிகழ்வுகளை நீங்கள் சீர்தூக்கிப் பார்த்தால், எந்தக் கட்டத்திலும் மதிமுக அதன் இலட்சியங்களை யாருக்காகவும் விட்டுக் கொடுத்ததில்லை.
திருச்சியிலே நடந்த மதிமுக முதல் மாநில மாநாட்டிலே தமிழீழம்தான் நமது இலக்கு என்று தீர்மானம் போட்டவர்கள் நாம். கடந்த ஆண்டு கரூரில் அண்ணா பிறந்த நாள் விழா மாநாடு நடந்த பின்பு, 17-ந் தேதி தந்தை பெரியார் பிறந்த நாளில் 1500 தோழர்களுடன் நாம் சாஞ்சிக்குப் போனோம்’’என்றார்.

ad

ad