மாகாண கழகங்களுக்கிடையிலான கால்பந்து சுற்றுப்போட்டி 26 இல் ஆரம்பம்
கோட்டை மாநகர சபை யின் ஏற்பாட்டில் நடத்தப்ப டவிருக்கும் அகில இலங்கை ரீதியிலான மாகாணங்களுக்கிடையிலான கால்பந்தாட்ட சுற்றுப்போட்டிகள் ஒக்டோபர் 26ஆம் திகதியிலிருந்து கொழும்பு கோட்டை ஒபேசபுர மைதானத்தில் நடாத்தப்படவுள்ளது.
அகில இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் அனுசரணையுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இச்சுற்றுப்போட்டிகளுக்கு இலங்கையின் சகல மாகாணங்களிருந்தும் கால் பந்தாட்ட அணிகளுக்கு கொழும்பு மாநகரசபையினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கொழும்பு கோட்டை மாநகர சபை முதல்வர் ஜனகா ரணவக்க தெரிவிக்கையில்,
கடந்த காலங்களில் சர்வதேச ரீதியிலான உதைபந்தாட்ட போட்டிகளில் இலங்கை பாரிய பின்னடைவுகளை சந்தித்துள்ளது. எனவே, இலங்கையில் சிறந்த உதைப்பந்தாட்ட வீரர்களை தெரிந்தெடுக்க வேண்டியது எமது தேவையாகவுள்ளது.
எனவே,வருங்காலங்களில் இலங்கையின் சர்வதேச உதைபந்தாட்ட அணியை பலப்படுத்தும் நோக்கோடும் இளைஞர்களின் போதைப்பொருள் பழக்கத்தை இல்லாதொழிக்கும் நோக்கோடும் இவ்வாறான கால்பந்தாட்டப்போட்டிகள் நடத்தப்படுகின்றன.