குமரகுருபர சுவாமிகள் கலைமகளை வேண்டியப் தமிழில் பாடிய பாமாலை ஆகும். குமரகுருபர சுவாமிகள் தனது ஞான தேசிகரான தருமபுர ஆதீன நான்காவது குருமுதல்வராக விளங்கிய ஸ்ரீமாசிலாமணி தேசிகரிடத்து விடைபெற்று காசிக்குச் சென்றார். அப்பொழுது தில்லி பாதுஷாவாக விளங்கிய முகம்மதிய மன்னனை வாதிலே வெல்லக் கருதி அம்மன்னனது மொழியாகிய இந்துஸ்தானியை அறிந்து கொள்வதற்காக சகலகலாவல்லி மாலை என்னும் பாமாலையைப் பாடினார். அழகிய தமிழ் மொழியில் பாடப்பட்ட சகலகலாவல்லி மாலை வெண்டாமரைக்... எனும் பாடலில் தொடங்கி மண்கண்ட வெண்குடை.. எனும் இறுதிப் பாடலில் முடிகிறது. இதில் பத்துப் பாடல்கள் அடங்குகின்றன. ஈழத்தில் நவராத்திரி காலங்களில் ஒன்பது நாளும் சகலகலாவல்லி மாலை சைவ மக்களால் பாடப்பட்டு வருகின்றது. ****************************************** குமரகுருபர சுவாமிகள் அருளிய சகலகலாவல்லி மாலை
வெண் தாமரைக்கு அன்றி நின் பதம் தாங்க என் வெள்ளை உள்ளத் தண்டாமரைக்குத் தகாது கொலோ சகம் ஏழும் அளித்து உண்டான் உறங்க வொழித்தான் பித்தாக உண்டாக்கும் வண்ணம் கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே. நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய் தர நாற்கவியும் பாடும் பணியிற் பணித்தருள் வாய் பங்கயாசனத்திற் கூடும் பசும்பொற் கொடியே கனதனக் குன்றுமைப் பாற் காடும் சுமக்கும் கரும்பே சகல கலாவல்லியே.
அளிக்கும் செழுந்தமிழ்த் தெள்அமுதுதார்ந்து உன் அருட் கடலில் குளிக்கும் படிக்கென்று கூடும் கொலொ உளங் கொண்டு தெள்ளித் தெளிக்கும் பனுவற் புலவோர் கவிமழை சிந்தக் கண்டு களிக்கும் கலாப மயிலே சகல கலாவல்லியே.
பாட்டும் பொருளும் பொருளால் பொருந்தும் பயனும் என்பால் கூட்டும் படிநின் கடைக்கணல் காயுளங் கொண்டு தொண்டர் தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால் அமுதம் தெளிக்கும் வண்ணம் காட்டும் வெள்ளோதிமப் பேடே சகல கலாவல்லியே.
சொல்விற் பனமும் அவதான முங்கவி சொல்ல வல்ல நல்வித்தையும் தந்து அடிமை கொள்வாய் நளினாசனஞ்சேர் செல்விக்கு அரிது என்றொரு காலமும் சிதையாமை நல்கும் கல்விப் பெரும் செல்வப் பேறே சகல கலாவல்லியே.