இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர் பதவிக்கு 6 பேர் விண்ணப்பித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
விண்ணப்பிப்பதற்கான இறுதித்தினம் நேற்று முன்தினமாக அமைந்திருந்த நிலையிலேயே இலங்கை கிரிக்கெட் சபை இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.
இலங்கையின் தற்போதைய பயிற்றுவிப்பாளரான கிரஹம் ஃபோர்ட் தனது 2 வருட கால ஒப்பந்த முடிவில்இ அதனைப் புதுப்பிக்காது தனது பதவியிலிருந்து விலக வுள்ள நிலையில்இ புதிய பயிற்றுவிப்பாளருக்கான விண்ணப்பங்களை இலங் கை கிரிக்கெட் சபை கோரியிருந்தது.
இந்நிலையில் 6 பேர் இப்பதவிக்காக விண்ணப்பித்ததை வெளிப்படுத்திய இலங்கை கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரியான ஆஷ்லி டீ சில்வா, அவர்கள் யார் என்ற விபரத்தை வெளியிட விரும்பவில்லை எனத் தெரிவித்தார்.
எனினும்இ இதுவரை வெளியான தகவல்களின் அடிப்படையில், இலங்கையின் முன் னாள் உபபயிற்றுவிப்பாளர் போல் பப்ரேஸ் இப்பதவிக்கு விண்ணப்பித்துள்ளதாகத் தெரிய வருகிறது.
இவரைத் தவிர, ஷேன் டப், இலங்கையின் தற்போதைய களத்தடுப்புப் பயிற்றுவிப்பாளர் றுவான் கல்பகே ஆகியோரும் விண்ணப்பித்துள்ளதாக அறிவிக்கப்படுகிறது.