புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 மே, 2014

ஐநா தீர்மானம் தொடர்பில் விளக்கமளிக்க கிழக்கில் விசேட கூட்டங்கள் ஏற்பாடு!-கூட்டமைப்பு



ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றியுள்ள தீர்மானங்கள் தொடர்பில் மக்களுக்கு விளக்கமளிக்கவும், அது தொடர்பில் மக்களை விழிப்பூட்டுவதற்குமான கூட்டங்கள் கிழக்கில் இம்மாத இறுதியில் இடம்பெறவுள்ளதாக தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராஜா பா.உ. தெரிவித்தார்.
எதிர்வரும் 30ம் திகதி வெள்ளிக்கிழமை மட்டக்களப்பிலும், 31ம் திகதி சனிக்கிழமை அம்பாறை மாவட்டத்திலும், அக்கூட்டங்கள் நடைபெறவுள்ளன.
இந்த முக்கிய கூட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம். ஏ.சுமந்திரன் ஆகியோர் ஐ.நா. மனித உரிமைப் பேரவை தீர்மானங்கள் தொடர்பில் விசேட உரையாற்றவுள்ளார்.
இதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை இலங்கைக்கு எதிராக நிறைவேற்றியுள்ள தீர்மானங்களை எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இது விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சர்வதேசக் கடமைகள் என்ன? இலங்கையில் தமிழ் மக்கள் மத்தியில் இத்தீர்மானங்கள் தொடர்பில் ஒத்துழைப்பு வழங்கி பூரணமான நிறைவேற்றப்பட முன்னெடுக்க வேண்டிய செயற்பாடுகள் தொடர்பில் இக்கூட்டங்ளில் ஆராயப்படவுள்ளதுடன் பொதுமக்களின் கருத்துகளும் உள்வாங்கப்படவுள்ளன.

ad

ad