புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 மே, 2014


யாழ். பல்கலைக்கழகத்துள் இராணுவ தலையீடு வேண்டாம்.மாவை சேனாதி அறிக்கை 
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகப் பேராசிரியர் மற்றும் மாணவர்களை அச்சுறுத்தியும், கொலைமிரட்டல் விடுத்தும் மர்மமான முறையில் பல்கலைக்கழக வளாகத்தில் சுவரொட்டிகள் ஓட்டப் பட்டுள்ளதாகவும், துண்டு பிரசுரங்கள் வெளியிடப் பட்டுள்ளதாகவும்
செய்திகள் நாளேடுகளில் வெளிவந்துள்ளன. நேரடியாகவும் தகவல்கள் கிடைத்திருக்கின்றன.
அதற்க்கு மேலாக 16ஆம் திகதி முதல் “பல்கலைக்கழகம் மூடப்பட்டிருக்கும், விடுதிகளிலிருந்து மாணவர் வெளியேற வேண்டும்” எனப் பதிவாளர் அறிவித்தல் கொடுத்திருப்பதாகவும், ஆனால் பதிவாளர் விடுமுறையில் இருப்பதாகவும் அவர் அந்த அறிவித்தலை மறுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அடுத்ததாக, “யாழ். பல்கலைக்கழகத் தரப்பினரை தன்னுடன் சந்திப்புக்கு வருமாறு, பல்கலைக்கழகத் துணைவேந்தர், பீடாதிபதிகள் மாணவர் தலைவர்களை யாழ். மாவட்ட இராணுவத் தளபதி அழைத்திருப்பதாகவும்” இன்னொரு செய்தி வந்திருக்கிறது. ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் யாழ். பல்கலைக்கழகத்தில் மர்மமான சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்கள், பல்கலைக்கழகத்தை மூடும் பதிவாளர் அறிவித்தல் யாவிலும் இராணுவத்தினரின் சம்பந்தம் இருக்கலாம் என்ற ஐயமே ஏற்படுகிறது.
எவ்வாறாயினும் இத்தகைய நடவடிக்கைகள், சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்கள் பேராசிரியர்கள், மாணவர்களை அச்சுறுத்தும் கொலைமிரட்டல் விடுப்பது யார் ? பல்கலைக்கழக வளாகத்தில் இச் செயலைச் செய்வதற்கு யார் இடமளித்தார்கள் ?
இவ்வகையில் பல்கலைக்கழகம் மூடப்படுவதையும் இது தொடர்பில் நடைபெற்றுள்ள கொலை அச்சுறுத்தல்களையும் நாம் வன்மையாக கண்டிக்கின்றோம், இச்சம்பவங்கள் தொடர்பாக துணைவேந்தர் பதிலளிக்கக் கடமைப் பட்டுள்ளார். இச்சம்பவங்கள் தொடர்பாக உயர் கல்வி அமைச்சரைத் தொடர்பு கொண்டேன். அமெரிக்காவிலிருந்து இன்றிரவு தான் இலங்கை வருகிறார் என்று அறிந்தேன். உயர் கல்வி அமைச்சின் செயலாளரிடம் தொடர்பு கொண்டு பேசியுள்ளேன். அமைச்சருக்கு தெரியப்படுத்தும்படியும் கேட்டுள்ளேன்.
பல்கலைக்கழகத்தினுள், பல்கலைக்கழக நிர்வாகத்தில் இராணுவம் தலையிடவோ, நுழையவோ இடமளிக்கக் கூடாது. அப்படி ஏதும் அசம்பாவிதம் என்று எதுக்களில் இருப்பின் பல்கலைக்கழக நிர்வாகம், துணைவேந்தர் உயர் கல்வி அமைச்சுக்கு அறிவிக்கவேண்டும். இறுதியாகத் தேவைப்படின் போலீஸ் உதவியை நாடலாமே தவிர எக்காரணம் கொண்டும் இராணுவம் தலையிட இடமளிக்கக் கூடாது என யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தரையும், உயர் கல்வி அமைச்சரையும் கேட்டுக் கொள்கின்றேன். இராணுவம் கல்வி நிறுவனங்களில் நுழைய அனுமதிக்க வேண்டாம்.
இத்தகைய இராணுவத் தலையிடுகள், மீண்டும் பயங்கரவாதத்தை துண்டுவதாகவும், மாணவர்களைக் கல்விச் சமூகத்தைக் கொலை அச்சுறுத்தலுக்கு ஆளாக்குவதும் அவர்களை அடிமைகளாக வைத்திருக்கவே அரசும், இராணுவமும் முயற்சிக்கிறது என்றே கருத இடமுண்டு. யாழ். மக்களின் கல்வியைச் சீரழிக்கும் சதித்திட்டமே இத்தகைய நடவடிக்கை எனக்கண்டிகின்றோம். சுதந்திரமான சூழல் கல்விப் பீடங்களில் இருக்க வேண்டும் என்பதை வற்புறுத்துகின்றோம்.

மாவை. சோ. சேனாதிராசா, பா. உ

ad

ad