புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 மே, 2014

மீண்டும் பஞ்சாபிடம் சென்னை அதிர்ச்சித் தோல்வி 
சென்னை அணிக்கெதிரான ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில் பஞ்சாப் அணி 44ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஐ.பி.எல் 29வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்
மற்றும் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.
இதில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களத்தடுப்பை தெரிவு செய்ததையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி மேக்ஸ்வெல், பெய்லியின் அதிரடியில் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 231 ஓட்டங்கள் எடுத்தது.
ஷேவாக் 30 ஓட்டங்களும், மில்லர் 47 ஓட்டங்களும், ஜார்ஜ் பெய்லி 13 பந்தில் 40 ஓட்டங்களும் எடுத்தனர்.
கடந்த சில போட்டிகளில் அமைதியாக இருந்த மேக்ஸ்வெல் இன்று மீண்டும் தனது அதிரடியை கையில் எடுக்க 38 பந்தில் 6 பவுண்டரி, 8 சிக்சர்களுடன், 90 ஓட்டங்கள் எடுத்தார்.
பந்துவீச்சில் சென்னை சார்பாக மோகித் சர்மா 2 விக்கெட் வீழ்த்தினார்.
இதனையடுத்து 232 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 187 ஓட்டங்கள் மட்டும் எடுத்து 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
மெக்கல்லம் 33 ஓட்டங்களும், ரெய்னா 35 ஓட்டங்களும், பிளசிஸ் 52 ஓட்டங்களும், அணித்தலைவர் டோனி 23 ஓட்டங்களும் எடுத்தனர்.
பந்துவீச்சில் பஞ்சாப் சார்பில் மிட்சல் ஜான்சன் 2 விக்கெட் வீழ்த்தினார். அதிரடியாக விளையாடிய மேக்ஸ்வெல் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

ad

ad