""நாம பேசுன செய்தியை, பிரிண்ட்ல பலரும் படிக்கிறதைப் பார்த்திருக்கிறே. அதிலும் நம்ம நக்கீரனில் இப்படியொரு டைட்டிலான்னு கோட்டை அதிகாரிகள் ஆச்சரியப்பட்டிருப்பாங்க.''
""அதிகாரிகளாச்சே.. உண்மை விவரமும் நிலவரமும் அவங்களுக்குப் புரியுமே... அப்பாயிண்ட்மெண்ட், டிஸ்கஷன், முக்கியமான ஃபைல்களைப் பார்ப்பதுன்னு கோட்டையில் ஜெ. பிஸியாகத் தான் இருக்காரு. தீர்ப்பு குறித்த டென்ஷன் எதையும் செகரட்டரியேட்டில் பார்க்க முடியலை. ஆனா தமிழக நிலவரத்தை மத்திய உளவுத்துறையான ஐ.பி. உன்னிப்பா பார்த்துக்கிட்டுத்தான் இருக்குது. பழைய ஆட்களெல்லாம் எந்தவிதத்திலும் உதவி செய்யலைன்னு பெங்களூரு கேஸோட இறுதி விசாரணைக் கட்டம் சமயத்திலே அவங்களை ஜெ தரப்புவிரட்டிட்டு, உயரதிகாரிகள் மூலமாகவும் பிரபலமான வக்கீல்கள் மூலமாவும் முயற்சிகளைத் தொடர்வதைப் பற்றி உளவுத்துறை ஆட்கள் க்ளியரா ரிப்போர்ட் எடுத்திருக்காங்க.''
""முயற்சிகள் பற்றி அவங்க ரிப் போர்ட்டில் என்ன சொல்றாங்களாம்?''
""அது சம்பந்தமா வெளிப்படையா பேசலைன்னாலும் பூடகமா சில விஷயங்கள் வெளியே வருது. முதல்வரோட அரசாங்க ஆலோசகர் "5 நிமிடம் உங்க கிட்டே பேசணும்'னு குன்ஹாகிட்டே மூவ் பண்ணப்பட்டிருக்குது. ஆனா அவர்கிட்டே பாசிட்டிவ்வான பதில் கிடைக்கலையாம். 8-ந் தேதியன்னைக்கு ஏதாவது பாசிட்டிவ் சிக்னல் வரும்னு தான் கார்டன் தரப்பு எதிர்பார்ப்போடு இருந்ததாம். சட்டத்துறையோட தொடர்புடைய சில அரசியல் பவர் ஆசாமிகளும் ஜெ. தரப்புக்காக ரொம்ப மெனக்கெடுறாங்க. அதில் ஒருசிலர், நீதிபதி குன்ஹாகிட்டே பேசக்கூடிய நீதித்துறை ஆட்கள் மூலமா அப்ரோச் பண்ணிப்பார்த்திருக்காங்க. நீதிபதி எந்தப்பிடியும் கொடுக்கலையாம். அப்ரோச் பண்ணுனவங்ககிட்டே, அவங் களுக்குத்தான் சட்டம் நல்லா தெரிஞ் சிருக்குதே... ஹைகோர்ட்டில் பெட்டி ஷன் மேலே பெட்டிஷன் போடுறாங் களே... இது சம்பந்தமாகவும் ஹை கோர்ட்டிலேயே பார்த்துக்கச் சொல் லுங்கன்னு பதில் சொல்லப்பட்டிருக்குது. பெங்களூரிலிருந்து எதிர்பார்த்த பாசிட்டிவ் சிக்னல் எதுவும் வராததில் கார்டன் அப்செட்தானாம்.''
""முயற்சிகள் தொடர்ந்து கிட்டேதானே இருக்கும்?''
""அதையும் சொல்லுப்பா!''
""தீர்ப்பு சாதகமா வரும். ஒருவேளை பாதகமா வந்தா உடனடியா தீர்ப்பையும் தண்டனையையும் நிறுத்தி வைக்க கர்நா டக ஹைகோர்ட்டிலோ, சுப்ரீம் கோர்ட் டிலோ பெட்டிஷன் போட்டு இரண் டையுமே நிறுத்திவைக்க சட்ட வழிகள் இருக்குன்னு சொன்னதோடு, அதற்குத் தகுந்தபடி பெரிய வக்கீல் பட்டா ளத்தைப் பெங்களூருவிலும் டெல்லி யிலும் ரெடி பண்ணி வச்சிட்டாராம் வேணுகோபால். அதேநேரத்தில் அர சாங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் பவர் சென்டர்கள் மூலமாகவும் முயற்சிகள் நடந்துக்கிட்டிருக்குது.''
""அதுதான் ரொம்பகாலமா நடக்குதே... முன்னாள் மத்திய சட்ட அமைச்சர் பரத்வாஜ், கர்நாடக கவர்னரா இருந்தப்ப அவர் மூலமா அப்ரோச் நடந்தது. கவர்னர் தரப்பிலிருந்து பேசியும்கூட நீதிபதியை நெருங்க முடியலைன்னு அப்ப தகவல் வந்ததுப்பா.''
""இப்பவும் கவர்னர் உதவிக்கரம் தொடருது. பரத்வாஜ் போலவே நம்ம கவர்னர் ரோசய்யாவும் காங்கிரஸ்காரர்தான். ஆனாலும் ஜெ.விடம் நட்புறவோடு இருக்காரு. அந்த வகையில் கர்நாடக முதல்வரான சித்தராமையாகிட்டே இந்த கேஸ் பற்றி ரோசய்யா ஆலோசிச்சாராம். இரண்டுபேருமே காங்கிரஸ்காரங்க ளாச்சே! சித்தராமையா ரொம்பத் தெளிவா, நீதிபதி குன்ஹா எங்க மாநில அரசின் வரையறைக்குள்ளே இருந்தாலும் கோர்ட் விஷயங்களில் நாங்க தலையிடுற தில்லை. ஆனா டெல்லியிலிருந்து கட்சித்தலைமை சொன்னா இதைப் பற்றி யோசிக்கலாம்னு சொல்லியிருக்காரு. ரோசய்யாவும் டெல்லியில் இருக்கிற அகமது பட்டேல், ஆஸ்கர் பெர்னாண்டஸ் இவங்க மூலமா சோனியாகாந்திகிட்டே விஷயத்தைக் கொண்டு போயிருக்காரு.''
""ரோசய்யாதான் இந்த விஷயத்தில் ரொம்ப இன்ட்ரஸ்ட் காட்டுறாரு. தமிழ் நாட்டில் தி.மு.கவோடு கூட்டணி இல்லாத நிலையில் ஜெ.வுக்கு உதவி செய்து அ.தி.மு.க தரப்பைக் காங்கிரஸ் கவரலாமேங்கிற அளவுக்கு ராஜ்பவனிலிருந்து இன்ட்ரஸ்ட் காட்டப்பட்டிருக்குது. சோனியாவைப் பொறுத்தவரை, இந்த கேஸோட பொஸிஷன் என்ன, அரசியல் தலையீடு சாத்தியமான்னு தெரிஞ்சிக்கிறதில் இன்ட்ரஸ்ட் காட்டுறாரு. அதனால இதைப் பற்றி கர்நாடக முதல்வர் சித்தராமையாகிட்டே கேட்டிருக்காரு.''
""அவர் என்ன சொன்னாராம்?''
""என்னவாம்?''
""இத்தனை ஊகங்களுக்கும் காரணமா இருப்பது செப் டம்பர் 20-ந் தேதிதான். அந்த தீர்ப்பு தேதியை முடிவு செய்த நீதிபதி குன்ஹா இதை யெல்லாம் யோசிக்காமலா இருப்பாரு?''
""அவரோட யோசனையெல்லாம் தீர்ப்பிலே தான் முழுமையா இருக்குது. இதுதான் பெங்களூ விலிருந்து எனக்கு கிடைச்ச தகவல். முக்கியமான பகுதியை ரெடி பண்ணிட்டாருன்னும் அது சம்பந்தமான கரெக்ஷன்களை ஸ்பெஷல் கோர்ட் டைப்பிஸ்ட் செய்துகிட்டிருக்காராம். ஆயிரம் பக்கங்களுக்குக் குறையாதுன்னு சொல்றாங்க. சம்பந்தப்பட்ட துறைகளுக்கான கடிதம், வாரண்ட்டுன்னு எல்லாவற்றையும் நீதிபதி சீரியஸா கவனிக்கிறாராம்.''
லாஸ்ட் புல்லட்
|