புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 செப்., 2014


யாழில் பெண்ணொருவரை வீடியோ எடுத்த ஈபிடிபியின் ஆதரவாளர்: நையப்புடைத்த மக்கள்
யாழ். நகரப் பகுதியிலிருந்து பேருந்தில் பயணித்த பெண்ணின் அந்தரங்கங்களை வீடியோ எடுத்துக் கொண்டிருந்த யாழ்.மாநகர சபையின் முன்னாள் மேயரின் சாரதியும், ஈ.பி.டி.பி ஆதரவாளருமான இளைஞரை பொது மக்கள் மடக்கிப்பிடித்து நையப்புடைத்த சம்பவம் இன்று யாழ்.நகரில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்.நகரப் பகுதியிலிருந்து குடாநாட்டின் மற்றொரு பகுதிக்குப் பயணமான பேருந்தில் குறித்த நபரும் சென்றுள்ளார்.
இந்நிலையில் அதே பேருந்தில் பயணித்த பெண் ஒருவரின் அந்தரங்கங்களை குறித்த நபர் கைத்தொலைபேசியில் வீடியோ எடுத்துக் கொண்டிருப்பதை இளைஞர் ஒருவர் அவதானித்துள்ளார்.
இதனையடுத்து, எதற்காக இவ்வாறு நடந்துகொள்கின்றீர்? என கேட்டதற்கு, இந்த நபர் தான் அமைச்சரின் ஆள் எனவும், தான் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை எனவும் கூறியதுடன், பேருந்திலிருந்து இறங்கி ஓட முற்பட்டுள்ளார்.
இதன்போது நகரப் பகுதியிலிருந்த இளைஞர்கள் சிலர் குறித்த நபர் ஓடுவதைக் கண்டு துரத்திப்பிடித்து எதற்காக ஓடினாய் என விசாரித்தபோது பேருந்தில் இவரின் சேஷ்டைகளை அவதானித்த இளைஞரும் அந்த இடத்திற்கு வந்து விடயத்தை தெரியப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து, அமைச்சரின் ஆளுக்கு நகரப் பகுதியில் வைத்து பொதுமக்கள் நையப்புடைத்துள்ளனர்.
பின்னர் சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து, பொலிஸார் வந்து குறித்த நபரின் கைத்தொலைபேசியை பார்த்த பொழுது பல பெண்களின் அந்தரங்கங்களை இவர் வீடியோ எடுத்து வைத்திருந்தமை அம்பலப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த நபரை கைது செய்த பொலிஸார் நாளைய தினம் நீதிமன்றில் ஆஜர் செய்யவுள்ளனர்.
மேலும் இதே நபர் அண்மையில் மதுபோதையில் வாகனத்தை ஓட்டி மின்கம்பத்தில் மோதி விபத்து நடந்தமை, அதனையடுத்து இவர் வாகனத்தை ஓட்டவில்லை என முன்னாள் மாநகர முதல்வர் பொலிஸாருக்கு பொய் கூறியிருந்தார்.
எனினும் விசாரணை செய்த பொலிஸார் இவரே வாகனத்தை ஓட்டினார் என கண்டுபிடித்து நீதிமன்றில் குறித்த நபரை ஆஜர் செய்திருந்தனர்.
இதேவேளை குறித்த நபர் ஈ.பி.டி.பி தீவிர ஆதரவாளர் என்பதுடன், யாழ்.மாநகர முதல்வரின் சாரதியாகவும் அவருடைய பதவிக்காலம் முடிந்த பின்னர் அவருடைய பணிப்பின் பெயரில் தற்பொழுது யாழ்.மாநகர ஆணையாளரின் சாரதியாகவும் இருக்கின்றமை இங்கே குறிப்பிடத்தக்கது.

ad

ad