புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 டிச., 2014

தாராபுரம் அருகே பஸ்–பைக் மோதி 3 பேர் பலி
தாராபுரம் குண்டடத்தை அடுத்துள்ளது பீலிக்காம்பாளையம். இந்த பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது41). இவர் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் ஊழியராக இருந்தார். இவரது மகள்கள் வைஷ்ணவி (13), சொப்ணபிரியா (9) ஆகியோருடன் பீலிக்காம்பாளையத்தில் இருந்து தாராபுரம் டவுனில் நடந்த திருமண நிழ்ச்சிக்கு சென்றார்.

திருமண நிகழ்ச்சி முடிந்ததும் மோட்டார் சைக்கிளில் பீலிக்காம்பாளையத்துக்கு புறப்பட்டனர். குப்பணங்கோவில் என்ற இடத்தில் வந்தபோது எதிரே திருப்பூரில் இருந்து மதுரைக்கு அரசு பஸ் வந்தது.

அங்குள்ள அபாயகரமான வளைவில் வந்தபோது அரசு பஸ்சும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதின. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற சண்முகம் மற்றும் அவரது குழந்தைகள் தூக்கி வீசப்பட்டனர். படுகாயம் அடைந்த சண்முகம் மற்றும் அவரது மூத்த மகள் வைஷ்ணவி ஆகியோர் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர்.

படுகாயத்துடன் உயிருக்கு போராடிய மற்றொரு மகள் சொப்ணபிரியாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சொப்ணபிரியாவும் இறந்தார்.

விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த குண்டடம் போலீசார் அரசு பஸ் டிரைவர் செல்லகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ad

ad