விளம்பரம் இல்லாமல் அமைதியாக செய்து முடிக்கப்படும் சிறப்பான திட்டங்களின் வரிசையில் புங்குடுதீவு மடத்துவெளி ஊரதீவு நிலத்தடி நீர்த்தேக்கம் -சுவிஸ் கம்லபிகை பழைய மாணவர் சங்கத்தின் மற்றுமொரு திட்டத்தின் பாரிய வெற்றி
மேற்படி திட்டத்தின்கீழ் மழைநீரை கடலுக்குள் செல்லவிடாமல் தடுக்கும் வகையில் புங்குடுதீவின் ஊரதீவு ஐயனார் கோவிலிருந்து நாகதம்பிரான் கோவில் வரையிலான பகுதியில் அணைபோன்று மணல் திட்டுக்களை அமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதேபோன்று மடத்துவெளி வயலூர் முருகன் கோவில் சுற்றாடலில் நெற்பயிர்ச்செய்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் மடத்துவெளி, ஊரதீவு பகுதியின் பிரதான பாதைகளில் மரம் நடுகையும் மேற்கொள்ளப்பட்டது.
மேற்படி நடவடிக்கைகள் திரு சண்முகநாதன் அவர்களது ஒழுங்கமைப்பில் நடைபெற்று வருகின்றது.
இந்த வேலைத்திட்டங்கள் யாவும் புங்குடுதீவு கமலாம்பிகை பழைய மாணவர் சங்க சுவிஸ் அமைப்பின் உறுப்பினர்களின் நிதிப்பங்களிப்பின் ஊடாக செயற்படுத்தப்பட்டு வருகின்றது.
தகவல் மற்றும் படங்கள்…