அரசாங்கத்தில் இருக்கும் அமைச்சர்கள் பலர் தற்போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக பணியாற்றுவதில்லை எனவும் அவர்கள் அரசாங்கத்திற்குள் இருந்து கொண்டு மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்காக பாடுபட்டு வருவதாகவும் தெரியவருகிறது.
அத்துடன் அரசாங்கத்திற்கு தற்போது எந்த களவான வேலைகளையும் செய்ய முடியாதிருப்பதாகவும் சகல தகவல்களை இந்த அமைச்சர்கள் எதிரணிக்கு தெரியப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இவ்வாறு மேற்கொள்ளவிருந்த இரகசியமான ஊடக நடவடிக்கை ஒன்றையும் அவர்கள் எதிரணிக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
சுயாதீன தொலைக்காட்சி சகல அதிகாரங்களையும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் அனுசரணையுடன் சுதர்மன் ரெந்தலியகொட மேற்கொண்டு வருகிறார்.
அத்துடன் தேசிய ரூபவாஹினியின் முழுப் பொறுப்பு அதன் பணிப்பாளர் சந்திரிபால லியனகேவிடம் உள்ளதுடன் அரச தகவல் திணைக்களத்தின் விசேட ஊடகப் பிரிவின் பணிப்பாளர் ஹரிந்திரநாத்தின் பொறுப்பின் கீழ் உள்ளது.
இவர்கள் அனைவரும் மகிந்த ராஜபக்ஷவினரின் ஆதரவாளர்கள். எனினும் அரசாங்கம் மேற்கொள்ளும் இரகசியமான சகல ஊடக நடவடிக்கைகளும் எதிரணிக்கு கசிந்து வருகிறது.
திட்டங்கள் செயற்படுத்தப்படும் முன்னரே தகவல்கள் வெளியாகி விடுவதால், அரசாங்கம் அதனை முற்றாக கைவிடும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.