புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஜன., 2015

தலித் வாலிபரை காதலித்த இஸ்லாமிய பெண்: கொன்று புதைத்த தந்தை


உத்திரபிரதேசத்தில் தலித் வாலிபரை காதலித்த முஸ்லீம் பெண் அவரது தந்தையால் கழுத்தை நெறித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
உத்திரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹஸன். அவரது மகள் ருக்சார் (19). ருக்சார் தனது கிராமத்தைச் சேர்ந்த தலித் வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.
இந்த காதலுக்கு ஹஸன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இருப்பினும் ருக்சார் தனது காதலை தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில் புதன்கிழமை இரவு ஹஸன் தனது மகளை கழுத்தை நெறித்துக் கொலை செய்துள்ளார்.
இது குறித்து பாதுகாவலர் ஒருவர் பொலிசாருக்கு தகவல் கொடுத்தார். தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிசார் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பொலிசார் புதைக்கப்பட்ட ருக்சாரின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து பொலிஸ் அதிகாரி ஆலோக் பிரியதர்ஷி கூறுகையில்விசாரணையில் ஹஸன் மற்றும் ஒருவர் சேர்ந்து ருக்சாரை கழுத்தை நெறித்து கொன்றது தெரிய வந்தது.
ஹசன் தனது மகளை கொலை செய்ததை ஒப்புக் கொள்ளவில்லை. ஆனால் மகளின் உடலை வீட்டுக்கு அருகே உள்ள சுடுகாட்டில் புதைத்ததை மட்டும் அவர் ஒப்புக் கொண்டார்.
ஆனால், நான் என் மகளை கொலை செய்யவில்லை என்று கூறியதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ad

ad