புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 மார்., 2015

தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பிலான கலந்த







தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் சிறுகட்சிகள் பங்கெடுத்த விசேட கலந்துரையாடலொன்றில் ஈ.பி.டி.பியின்
செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பங்கேற்றுள்ளார்.
கொழும்பில் அமைந்துள்ள சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களின் இல்லத்தில் நேற்றைய தினம் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பாக சிறுகட்சிகளின் நிலைப்பாடுகள், எதிர்கொள்ளும் சவால்கள், தேர்தல் மாற்றம் தொடர்பில் சிறுகட்சிகள் எடுக்கக் கூடிய இறுதித்தீர்மானங்கள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இக்கலந்துரையாடலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம், முஸ்லிம் காங்கிரஸின் செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஹஸன் அலி, முஸ்லிம் காங்கிரஸின் உபசெயலாளரும், கல்முனை மாநகர முதல்வருமான நிஸாம் காரியப்பர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான றிசாட் பதியூதீன், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் மற்றும் நவசமசமாசக் கட்சித் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ண ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதேவேளை, தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் முக்கிய பிரதிநிதிகள் பங்கேற்றிருந்த கலந்துரையாடலொன்று நேற்றுக்காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றிருந்தது.
Douglas Devananda-ன் படம்.
இதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேர்தல் முறைமை சீர்திருத்த யோசனைகளை எதிர்வரும் ஒருவாரத்திற்குள் தமக்கு வழங்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமும் கலந்துரையாடலில் பங்கேற்றிருந்த தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவிடமும் பணிப்புரை விடுத்தார்.
மேற்படி கலந்துரையாடலிலும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் தவராசாவும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ad

ad