புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஏப்., 2015

முடிந்தால் அடுத்த தேர்தலில் மஹிந்த போட்டியிட்டு வென்று காட்டட்டும்: ரில்வின் சவால்
அர­சியல் ஆசை இருந்­தாலும் மக்­களின் ஆத­ரவு இன்றி மஹிந்த ராஜபக்சவினால் தேர்தலில் போட்­டி­யிட்டு வெற்­றி­பெற முடி­யாது. முடிந்தால் அடுத்த தேர்­தலில் மஹிந்த போட்­டி­யிட்டு வென்று காட்­டட்டும் என்று மக்கள் விடு­தலை முன்­னணி சவால் விடுத்­துள்ளது.
கடந்த ஆட்­சியின் ஊழல் மோச­டி­களை மக்கள் நன்கு அறிந்­துள்­ளனர் என்றும் மக்கள் விடு­தலை முன்­னணி தெரி­வித்­தது.
தான் தேர்­தலில் போட்­டி­யிட்டால் வெற்றி பெறுவேன் என்று முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ச வெளி­நாட்டு ஊடகம் ஒன்­றிற்கு தெரி­வித்­துள்ள நிலையில் இது தொடர்பில் ஜே.வி.பி.யின் கருத்­தினை வின­விய போதே அக் கட்­சியின் பொதுச் செய­லாளர் ரில்வின் சில்வா மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.
அவர் மேலும் குறிப்­பிட்டதாவது,
மஹிந்த ராஜ­ப­க்சவின் அர­சாங்­கத்தின் இந்த பத்து வருட ஆட்சிக் காலத்தில் தேசிய ஒற்­று­மையில் பாரிய விரிசல் நிலைமை உரு­வா­கி­யது. மதக் கல­வ­ரங்­களும் அடக்­கு­முறை செயற்­பாடு­களுமே மேலோங்­கிக்­கா­ணப்­பட்­டன.
சிறு­பான்மை மக்கள் மட்­டு­மின்றி சிங்­கள மக்­களும் பல சந்­தர்ப்­பங்­களில் பாதிக்­கப்­பட்­டனர்.
நிறை­வேற்று ஜனா­தி­ப­தியின் சர்­வா­தி­கார போக்­கின் காரணமாக மக்கள் வெறுக்கும் நப­ரா­கவே இன்று மஹிந்த ராஜ­ப­க்ச மாறி­யுள்ளார்.
கடந்த ஆட்­சியில் செய்த தவ­றுகள், பொரு­ளா­தார மற்றும் வாழ்­வா­தார நெருக்­க­டிகள், அடக்­கு­மு­றைகள் என அனைத்தும் மக்கள் மத்­தியில் ஆழ­மாக பதிந்­துள்­ளன.
மஹிந்­தவின் அரச குடும்பம் செய்த மோச­டிகள் அனைத்தும் வெளிச்­சத்­துக்கு வந்­துள்­ளன.
இவ்வா­றா­ன­தொரு நிலை­மை யில் மக்கள் மீண்டும் மஹிந்த ராஜ பக் ஷ மற்றும் அவ­ரது குடும்ப அர­சி­ய­லுக்கு ஆத­ரவு தெரி­விக்­க­மாட்­டார்கள்.
எனினும் மஹிந்­தவின் தோளில் பய­ணித்த ஒரு சிலர் இன்றும் அவரை வைத்து அர­சியல் செய்ய முயற்­சிக்­கின்­றனர்.
மக்­களின் ஆத­ரவு இல்­லாத இவர்கள் தமது அர­சி­யலை தொடர்ந்தும் கொண்டு செல்­லவே இவ்­வா­றாக முயற்­சிக்­கின்­றனர். அதற்கும் மக்கள் இனிமேல் இடம்கொடுக்க மாட்­டார்கள்.
எனவே மஹிந்த ராஜ­ப­க் ஷ மீண்டும் அர­சி­ய­லுக்கு வந்து அதி­கா­ரங்­களை கைப்­பற்றும் முயற்சி இனி­யொரு போதும் நடக்கப் போவ­தில்லை. முடிந்தால் மஹிந்த ராஜபக்ச அடுத்த தேர்தலில் போட்டியிட்டு வென்று காட்டட்டும் என்றார்.

ad

ad