புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மே, 2015

பிரபல சட்ட வல்லுணர் அரசியல் ஆய்வாளர் வி தி தமிழ்மாறன் புங்குடு தீவு மாணவியின் கொலை சந்தேக நபரை தப்ப விட்டாரா?

அவரை தம்மிடம் ஒப்படைக்க கூறி மக்கள் பொலிஸாரின் வாகனத்தை சுற்றி போராட்டம்....தப்பியவர் கெழும்பிலா? வெளிநாடு தப்ப்பிச் செல்ல முயற்சியா?

சமூகத்தால் பெரிதும் மதிக்கப்பட்ட ஒருவர் புங்குடு தீவு மாணவியின் கொலை சந்தேக நபரை தப்ப விட்டதாக மக்கள் கொதிப்பு:-

அவரை தம்மிடம் ஒப்படைக்க கூறி மக்கள் பொலிஸாரின் வாகனத்தை சுற்றி போராட்டம்....

தப்பியவர் கெழும்பிலா? வெளிநாடு தப்ப்பிச் செல்ல முயற்சியா?
காப்பாற்றிய பிரமுகர் பொலிஸாரின் வாகனத்தில்... அடைக்கலம்... மக்கள் அவரை தம்மிடம் விடுவிக்க கோரி போராட்டம்... 3 மணித்தியாலமாக பதட்டம்...
காப்பாற்றிய பிரமுகருக்கு வெளிநாட்டு பணம் புரண்டதாக தகவல்...
இந்தப் சட்டத்துறை வித்தகரான  பிரமுகர் எதிர்வரும் பொதுத் தேர்தலில் கூட்டமைப்பில் கேட்கவுள்ளதாக பெயர் வெளிப்பட்டது....
இது பற்றி மேலும் தெரிய வருவதாவது மக்களால் பிடிக்கப்பட்ட சந்தேக நபரை தன்னிடம் ஒப்படையுங்கள் தான் பொலிசாரிடம் கவனமாக ஒப்படைப்பதாக இந்த பிரமுகர் மக்களுக்கு வாக்குறுதி அளித்து அவரை மீட்டு சென்றதாகவும் பின்னர் அவரை தப்பித்து செல்ல அனுமதித்ததாகவும் மக்கள் குளோபல் தமிழ்ச் செய்திகளிடம் தெரிவித்தனர்...
இதே வேளை இந்த பிரச்சனை குறித்து இன்று  பொலிஸ உயர் மட்டத்துடன் பேசி  சமாதானமாக மக்களின் கொந்தளிப்பை தணிக்க இவர் முற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன....
இதனால் ஆத்திரமுற்ற மக்கள் குறித்த பிரமுகரை தம்மிடம் ஒப்படைக்கும்  படி கோரி பொலிஸ வாகனத்தை சுற்றி வட்டமிட்டுள்ளனர்...
பதட்டத்தை அடுத்து அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்....
தப்பிய நபர் வெள்ளவத்தையில் நிற்பதாக கண்டவர்கள் கூறுகின்றனர்.....இவர் கட்டுநாயக்கா வழயாக தப்பிச் செல்லலாம் எனக் கூறப்படுகிறது.

ad

ad