புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஜூன், 2015

தமிழர் தாயகமாகின்றது கொழும்பு, கம்பாஹா! கூட்டமைப்பின் சுமந்திரன் சொல்லுகின்றார்?


தமது பிரதான தளமான வடக்கு - கிழக்குக்கு வெளியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடக் கூடும். இது கொழும்பு அல்லது கம்பாஹவாக இருக்கும் என்று கூறிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்  எம்.ஏ.சுமந்திரன் கொழும்பு ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.

வடக்கு - கிழக்குக்கு அதிகாரப் பகிர்வு வேண்டும் என்று கூட்டமைப்பு கோரினாலும், அடுத்த தேர்தலில் தமது கட்சி வேறு மாகாணங்களிலும் போட்டியிடலாம் எனவும் அவர் கூறியுள்ளார். வடக்கோடு நாம் எமது நடவடிக்கைகளை மட்டுப்படுத்தவில்லை. அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தில் நாம்   முழுமையாக பங்களித்தோம். பிரதம நீதியரசருக்கு எதிரான பதவி விலக்கல்  பிரேணையை நாம் எதிர்த்தோம். எனவே, தற்போதைய  நிலையில் நாம் தேசிய பிரச்சினைகளில் பங்களித்து வருகிறோம் எனக்கூறினார். எவ்வாறாயினும், தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பதன் அவசியத்தை வலியுறுத்திய சுமந்திரன், 'நாம் கரிசனை கொண்டுள்ள தேசிய பிரச்சினை என்று ஒன்றுள்ளது.  அது தீர்க்கப்பட வேண்டும். அதை தேர்தலுக்கு முன்னர் முழுமையாக தீர்க்க வேண்டிய தேவையில்லை என நாம் இந்த அரசாங்கத்துடன் ஓர் உடன்பாட்டுக்கு  வந்துள்ளோம்' என்றார்.

அரசாங்கம்  சரியான  திசையில் செல்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  கருதுகிறது. ஆனால், காணி மற்றும் அரசியல் கைதிகளின் பிரச்சினை  தீர்க்கப்படவில்லை. 100 நாட்களினுள் முழுக் காணிகளும் விடுவிக்கப்படும் என எதிர்ப்பார்த்தோம். ஆனால், 5 சதவீதமான காணிகள் தான் விடுவிக்கப்பட்டுள்ளன. எனவே, இதையிட்டு நாம் விரக்தியடைந்துள்ளோம். அரசாங்கம் , காணிகளை விடுவித்து வருவதால்தான் நான் அரசாங்கம் நல்ல வழியில் செல்வதாக கூறினேன்' என்றார்.

'அடுத்த பிரச்சினை, அரசியல் கைதிகளைப் பற்றியதாகும். அவர்களை விடுவிக்க சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால், எவரும் விடுவிக்கப்படவில்லை. அரசியல் கைதிகள் என யாரும் இல்லை என ஜனாதிபதி கூறியது கவலையளிக்கின்றது. இவர்கள் வன்முறையில் ஈடுபட்டாலும் சுயநலனுக்காக அதை செய்யவில்லை. அவர்கள் செயல் அரசியல் நோக்கம் கொண்டது. எனவே, அவர்கள் அரசியல் கைதிகள் என ஜனாதிபதியும் அரசாங்கமும் உணர வேண்டும். இந்த அரசாங்கம் மெதுவாக செயற்பட்டாலும் சரியான திசையிலேயே  செல்கின்றது. பிரச்சினைகளை தீர்ப்பதில் அரசாங்கம் ஆர்வமற்று இருந்ததை நாம் இதுவரை காணவில்லை. எனவே, அழுத்தம் கொடுத்தவாறு அரசாங்கத்தை தொடர்ந்து ஆதரிப்போம்' என அவர் மேலும் கூறியுள்ளார்.

ad

ad