வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் அமைந்துள்ள வசாவிளான் தெற்கு ஞானவைரவர் ஆலயத்தில் வைகாசி விசாக மடை உற்சவத்தை
மேற்கொள்ள பலாலி பாதுகாப்புப் படைத்தலைமையகம் அனுமதி வழங்கியுள்ளது.
வலிகாமம் வடக்கு மீள்குடியேற்றக்குழுவினர் குறித்த விடயத்தை இன்று தெரிவித்துள்ளனர்.
மேலும், ஆலயத்தில் நடைபெறவுள்ள வைகாசி விசாக மடையில் கலந்துகொள்ளவுள்ள பொதுமக்கள் நாளை வெள்ளிக்கிழமை (05) காலை 8 மணிக்கு வசாவிளான் மத்திய மகா வித்தியாலயத்துக்கு முன்பாக வருகை தரும்படி குழு கூறியுள்ளது.
மேற்படி பகுதியிலிருந்து பொதுமக்கள் இடம்பெயர்ந்த பின்னர் உயர்பாதுகாப்பு வலயமாக மாற்றப்பட்டு கடந்த 25 வருடங்களாக இந்த ஆலயத்துக்கு பொதுமக்கள் செல்ல இராணுவத்தினர் அனுமதிக்கவில்லை.
இந்தநிலையில் இவ்வாண்டு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர்.