புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஆக., 2015

வடமாகாண சபைக்கு மூன்று புதிய உறுப்பினர்கள் தெரிவு கரணவாய் க.தர்மலிங்கம்,துணுக்காய் வ.கமலேஸ்வரன் .


நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலையடுத்து வடமாகாண சபைக்கு மூன்று புதிய உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
 
இதன்படி வடக்கு மாகாண சபை உறுப்பினர்களாக இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த தர்மலிங்கம் சித்தார்த்தன், முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர். சிவமோகன் மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்டு மாகாண சபை உறுப்பினரான அங்கஜன் இராமநாதன் ஆகியோர் நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
 
குறித்த மூவரில் தர்மலிங்கம் சித்தார்த்தன் டாக்டர் சிவமோகன் ஆகியோர் விருப்பு வாக்குகளின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகியுள்ளதுடன் அங்கஜன் இராமநாதன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெற்றுக்கொண்ட 12 தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியுள்ளார்.
 
இந்நிலையில் வடமாகாண சபைத் தேர்தலின் போது பெற்றுக்கொண்ட விருப்பு வாக்குகளின் அடிப்படையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கரணவாய் தெற்கைச்சேர்ந்த கணபதிப்பிள்ளை தர்மலிங்கம் துணுக்காய் பகுதியைச் சேர்ந்த வல்லிபுரம் கமலேஸ்வரன் தெரிவாகினர்.
 
அடுத்தபடியாக அங்கஜன் இராமநாதனின் இடத்திற்கு வடமராட்சி அமைப்பாளரும் பருத்தித்துறை பிரதேச சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்ரீ ரங்கேஸ்வரன் வடக்கு மாகாண சபை உறுப்பினராக தெரிவாகியுள்ளார்.
 
இதேவேளை புதிய வடமாகாண சபை உறுப்பினர்கள் எதிர்வரும் 25 ஆம் திகதி நடைபெறவுள்ள மாகாண சபை அமர்வில் கலந்துகொண்டு பதவியேற்கவுள்ளதாக வடமா காண சபைத் தவிசாளர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.

ad

ad