புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஆக., 2015

மஹிந்த எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகிக்க முடியாது : சந்திரிக்கா

மஹிந்த ராஜபக்ஸ எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகிக்க முடியாது என  சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
எந்தவொரு சூழ்நிலையிலும் மஹிந்த ராஜபக்ஸ, பாராளுமன்றின் எதிர்க்கட்சித்தலைவராக நியமிக்கப்படக்கூடிய சாத்தியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் தொடர்பில் ஏற்கனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.   இளைய பிரபல்யமான ஒருவரை எதிர்க்கட்சித்தலைவராக நியமிக்க வேண்டுமென தாமும் ஜனாதிபதியும் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

கட்சியை அழிவடையச் செய்ய மஹிந்தவிற்கு இடமளிக்க வேண்டாம் என அவர் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களிடம் கோரியுள்ளார்.

ad

ad