புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஆக., 2015

முன்னணியில் அமைச்சர் பதவிகள் கிடைக்கவுள்ளவர்களின் பெயர் விபரங்கள்


ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் பங்கு அரசாங்கத்துடன் இணைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்டர்கள் பலருக்கு அமைச்சரவை அமைச்சுப் பதவிகள் கிடைக்கவுள்ளதாக சுதந்திர கட்சி தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முன்னாள் எதிர்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் பொதுச்  செயலாளர் அநுர பிரியதர்ஷன யாப்பா, முன்னணியின் முன்னாள் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் ஜோன் செனவிரத்ன, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தற்போதைய பொது செயலாளர் துமிந்த திஸாநாயக்க,
உப தலைவர் மஹிந்த அமரவீர, பேராசிரியர் சரத் அமுனுகம, ஏ.எச்.எம்.பவுசி, எஸ்.பீ. திஸாநாயக்க, மஹிந்த சமரசிங்க, டிலான் பெரேரா, விஜித் விஜயமுனி சொய்சா, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மற்றும் ரஞ்சித் சியம்பலாபிட்டிய ஆகியோருக்கு அமைச்சர் பதவி கிடைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களினுள் நிமல் சிறிபால டி சில்வா, அநுர பிரியதர்ஷன யாப்பா, சுசில் பிரேமஜயந்த, டப்ல்யூ.டீ.ஜே.செனவிரத்ன மற்றும் பேராசிரியர் சரத் அமுனுகம ஆகியோருக்கு அமைச்சரவை அமைச்சு பதவிகள் கிடைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவர்கள் தற்போதே அமைச்சர் பதவிகளை பெற்று கொள்வதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதோடு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மேலும் சிலருக்கு அமைச்சரவை அமைச்சர், இராஜாங்க அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் பதவிகள் கிடைக்கவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

ad

ad