புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஆக., 2015

புதிய அரசாங்கத்தில் இணைந்து அமைச்சுக்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெறவேண்டும்!- கிரியெல்ல


புதிய ஆட்சியில் அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொண்டு தமது மக்களுக்கு சேவையாற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முன்வர வேண்டுமென கண்டி மாவட்டத்தில் வெற்றியீட்டிய முன்னாள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
மறைந்த காமினி திஸாநாயக்கவுக்கு பின்னர் அதிகப்படியான விருப்பு வாக்குகளை தனக்கு பெற்றுக் கொடுத்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.
ஐ.தே.கட்சியின் வெற்றி தொடர்பில் முன்னாள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல மேலும் கருத்து தெரிவிக்கையில்,
நல்லாட்சி சூழ்நிலையில் நீதியும் நியாயமுமான தேர்தல் நடத்தப்பட்டது. இத் தேர்தலில் மக்கள் மீண்டும் நல்லாட்சிக்கு ஆதரவு வழங்கி அதனை தொடர்வதற்கு ஆணை வழங்கியுள்ளனர்.
எனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஸ்திரமான நல்லாட்சி நாட்டில் அமைவது உறுதியாகும்.
இதனால் புதிய நல்லாட்சியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இணைந்து அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொண்டு தமது மக்களுக்கு சேவையாற்ற முன்வர வேண்டும்.
அதனை விடுத்து தொடர்ந்தும் அரசியலில் எல்லைக்கோட்டில் நின்று கொண்டிருக்காது அரசுடன் இணைய வேண்டும்.
எனக்கு வாக்களித்த ஆதரவு வழங்கிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
எதிர்கால நல்லாட்சியில் எனது சேவைகள் தொடரும் என்றார்.

ad

ad