அன்பார்ந்த புங்குடுதீவுச் சமூகத்திற்கு வேதனையுடன் எழுதும் மடல் ........... அண்மையில் சுவிஸ் வாழ் புங்குடுதீவு மக்களினால் நடாத்தப்பட்ட நிகழ்வு ஒன்றில் நகைச்சுவை என்ற பெயரில் நடாத்தப்பட்ட நாடகத்தின் வார்த்தைப் பிரயோகங்கள் மற்றும் நாம் தெய்வீகமாக பூசிக்கும் அந்தணர்களை கீழ்த்தரமான முறையில் அழைத்தமை குறித்து எனது தனிப்பட்ட ரீதியிலான கண்டனத்தினை பதிவு செய்ய விரும்புகிறேன். இவ்வாறான செயற்ப்பாடுகள் ஒட்டுமொத்த புங்குதீவு சமூகத்திர்க்கும் இழுக்காக அமையும் என நான் எண்ணுகிறேன் .தயவு செய்து பொறுப்பானவர்கள் இதற்க்கு பகிரங்க மன்னிப்பு கோரி சமூக வலைத்தளங்களிலும் இணையத்தளங்களிலும் இருந்து அந்த நாடகப் பதிவினை அகற்றிட ஆவன செய்யவேண்டும் என்று தாழ்மையுடன் வேண்டுகிறேன்.
அன்புடன்
சிவசாமி -பிறேம் றஜீ ந்த்