புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 நவ., 2015

ஜனாதிபதி மாளிகை நிலக்கீழ் இல்லத்தை கொழும்பு துறைமுகத்துடன் தொடர்புப்படுத்தும் பணிகள் அரைவாசியுடன் நிறைவுப்பெற்றிருந்தன

ஜனாதிபதி மாளிகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் அமைக்கப்பட்ட நிலக்கீழ் மாளிகை, கொழும்பு துறைமுகத்துடன் தொடர்பு கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுகத்துடன் இந்த  தொடர்புப்படுத்தும் பணிகள் அரைவாசியுடன் நிறைவுப்பெற்றிருந்தன என்று ஆங்கில செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி மாளிகையில் பணியாற்றிய ஒருவரின் தகவல்படி குறித்த நிலக்கீழ் மாளிகைக்கு இரண்டு தடவைகள் மாத்திரமே தாம் சென்று வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
எனினும் குறித்த மாளிகை நாமல் மற்றும் யோசித்த உட்பட்ட ரக்பி நண்பர்களின் முழுமையான கட்டுப்பாட்டில் இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பெரும்பாலும் அலரி மாளிகையிலேயே வசித்து வந்தார். இந்தநிலையில் அவர் ஏன் இந்த நிலக்கீழ் நிர்மாணத்தை ஜனாதிபதி இல்லத்தில் அமைக்கவேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலக்கீழ் நிர்மாணப்பணிகள் பெரும்பாலும் ஒவ்வொரு நாளும் மாலை வேளையிலேயே இரகசியமாக மேற்கொள்ளப்பட்டு வந்தன என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ad

ad