பிள்ளையானின் பினாமியும் பிள்ளையான் குழுவின் சர்வதேசப் பொறுப்பாளருமான க.துரைநாயகம் நாடு கடத்தப்படக்கூடிய சாத்தியம்
பிள்ளையான் குழுவின் சர்வதேசப் பொறுப்பாளரும் சுவிஸ் உதயம் அமைப்பின் பொருளாளரும் பிள்ளையானின் பினாமியுமான க.துரைநாயகம் தலைமையில் சுவிஸ் பேண் நகரில் பிள்ளையான் குழுவினரின் முக்கிய கூட்டமொன்று நடைபெற்றுள்ளதாக அறிய முடிகிறது
தற்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான நடராஜா ரவிராஜின் கொலை தொடர்பில் முக்கியமான கொலையாளியாகக் கருதப்படும் பிள்ளையானின் சகாவான சரண் என்று அழைக்கப்படும் சிவகாந்தன் விவேகாநந்தனை சுவிஸ்சில் இருந்து நாடு கடத்த இருக்கும் நிலையில் இந்த அவசர கூட்டம் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
பிள்ளையான் கைதைத் தொடர்ந்து பிள்ளையான் குழுவின் செயலாளரும் பிள்ளையானின் அடியாளுமாகிய பூ.பிரசாந்தன் கைது செய்யப்பட்ட நிலையில் பிள்ளையான் குழுவின் முக்கியஸ்தர்கள் மட்டக்களப்பில் தலைமறைவாகியுள்ள நிலையிலும் கூட்டங்களை நடத்த முடியாத சூழலிலும் மற்றும் பிள்ளையான் குழுவினரால் கடந்த சில தினங்களாக இந்து ஆலயங்கள் , அவற்றின் விக்கிரகங்கள் உடைக்கப்பட்டு வரும் நிலையிலும் இவ் அவசர கூட்டம் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது
எதிர்வரும் காலங்களில் பிள்ளையானின் பினாமியும் பிள்ளையான் குழுவின் சர்வதேசப் பொறுப்பாளருமான க.துரைநாயகம் அவர்களிடம் கடத்தப்பட்டு கப்பமாகப் பெற்ற பெரும்தொகை பண மோசடி சம்மந்தமாக விசாரணைக்காக நாடு கடத்தப்படக்கூடிய சாத்தியமும் காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன , இவர் சுவிஸ்சில் பிள்ளையான் குழுவிற்காக "சுவிஸ் உதயம்" எனும் பெயரில் புலி எதிர்ப்பாளர்களிடமிருந்து நிதி திரட்டி வருவதும் குறிப்பிடத்தக்கது
கூட்டத்தின் ஒலி வடிவம் மிக விரைவில் இணைக்கப்படும்
பிள்ளையான் சுவிஸ் வந்த காலத்தில் நடந்த கூட்டங்கள்...