புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 நவ., 2015

ஆனையிறவில் புலிக் கொடி பறக்கின்றது!! மகிந்த குழுவின் திட்டமிட்ட வேலையா என சந்தேகம்?


கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவின் நிர்வாகத்தின் கீழ் அமைந்துள்ள ஆனையிறவு வெளியில் இன்று
அதிகாலை தொடக்கம் தமிழீழத் தேசிய கொடி பறந்து கொண்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.


இலங்கை இராணுவத்தினரின் ஆனையிறவு ஆக்கிரமிப்பிற்கெதிராக 2000 ஆம் ஆண்டு மார்ச் 26ம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளால் ஓயாத அலைகள் மூன்று என்ற தாக்குதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இத்தாக்குதலின் மூலம் ஆனையிறவுப் படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது.

35 நாட்களின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட ஆனையிறவுப் படைத்தளமானது, பத்தாயிரத்திற்கும் அதிகமான இலங்கை இராணுவத்தினரின் பாதுகாப்பில் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த வெற்றியை நினைவுபடுத்தும் வகையில் இன்று புலிக்கொடியை பறக்க விட்டிருக்கலாம் என்று கருதப்படுகின்றது.


அத்தோடு தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் இன்று என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலைப் புலிகளின் கொடி 1977ம் ஆண்டு தொடக்கம் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கொடியாக இருந்து வருகிறது.

தமிழீழ விடுதலைப் போரில் வீரமரணமடைந்தவர்களை நினைவுகூர்ந்து மாவீரர் நாளில் (நவம்பர் 21 1990) முதல் தடவையாக பிரபாகரனது பாசறையில் ஏற்றி வைக்கப்பெற்றது.

நாட்டைப் போற்றி வணங்குதற்கு ஈடாக தேசியக்கொடிக்கு வணக்கம் செலுத்தப்படுகின்றது.

தேசியக்கொடியை வணங்குவது, நாட்டை வணங்குவது போலாகும். நாட்டின் தலைவர், படை, ஆட்சி என்பவற்றைவிடவும் உயர்ந்ததாகத் தேசியக்கொடி மதிக்கப்படுகின்றது.

எனவேதான் எந்தவொரு நாட்டிலும் எந்தச் சிறப்பு நிகழ்வுகளின்போதும் நாட்டின் தலைவர், படை வீரர், அரசுப் பணியாளர், குடிமக்கள் அனைவரும் கொடிவணக்கம் செய்கின்றனர்.
இதே வேளை குறித்த புலிக் கொடிக்கும் மகிந்த குழுவுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருடன் சேர்ந்து வடக்கு, கிழக்கின் இயல்பு நிலையைக் குழப்பி புலிகள் வந்துவிட்டார்கள் என பீதியை ஏற்படுத்தி சிங்கள மக்களைக் குழப்பி நாட்டைக் கைப்பற்றுவதற்கு மகிந்த செய்யும் சூழ்ச்சி இது எனவும் சில அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

ad

ad