புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 நவ., 2015

கனடாவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த அரசியல் தலைவர் மரணம்

man_died 1
கனடாவில் விபத்தில் சிக்கியவரை காப்பாற்ற சென்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த சீக்கியர் ஒருவர் வாகனம் மோதி பலியானார்.

கனடாவில் உள்ள அல்பெர்ட்டா மாகாணத்தின் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் மன்மெத் புல்லர்(Manmeet Bhullar).
இந்திய வம்சாவளியை சேர்ந்த சீக்கியரான இவர் கடந்த திங்களன்று Calgary நகரில் இருந்து Edmonton நகருக்கு சென்றுகொண்டிருந்தார்.
அப்போது குயின் எலிசபெத் II நெடுங்சாலையில் வாகன ஓட்டி ஒருவர் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருப்பதை பார்த்துள்ளார்.
உடனடியாக தனது வாகனத்தில் இருந்து இறங்கி அவரை காப்பாற்ற சென்றுள்ளார்.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த ஒரு டிரக் வண்டி அங்கு நின்றுகொண்டிருந்த வாகனத்தின் மீதும் அருகில் நின்றுகொண்டிருந்த புல்லர் மீதும் மோதியது.
உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் சிகிச்சை பலனில்லாமல் அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புல்லரின் மரணம் குறித்து அவரது குடும்பத்தினர் கூறுகையில், அவருக்கு பிடித்ததை செய்யும் போது(பிறருக்கு உதவும்போது) தான் அவர் மரணமடைந்துள்ளார் என்று தெரிவித்துள்ளனர்.
கன்சர்வெட்டிவ் கட்சியை சேர்ந்த அவரது மறைவுக்கு பல அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ad

ad