புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 டிச., 2015

த.தே.கூ, உலகத் தமிழர் பேரவை இணைந்து செயற்படுவது நாட்டுக்கு ஆபத்தானது

உலகத் தமிழர் பேரவையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து செயற்படும் நிலை ஏற்பட்டுள்ளமை நாட்டுக்கு ஆபத்தான விடயம் என்று திவயின பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பான செய்தியில் திவயின பத்திரிகை தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளதாவது, விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டம் ராணுவ நடவடிக்கை மூலம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.
அதனையடுத்து அரசியல் போராட்டத்துக்காக உருவாக்கப்பட்டதே இந்த உலகத் தமிழர் பேரவையாகும். இறுதிக்கட்ட யுத்தத்தின் ராணுவத் தளபதிகளையும், அரசியல் தலைமையான மஹிந்தவையும் போர்க்குற்றவாளிகளாக்கி தண்டிப்பதே இந்த அமைப்பின் பிரதான நோக்கமாகும்.
குறித்த அமைப்புக்கு இதுகால வரையும் இலங்கையில் செயற்பட முடியாதவாறு தடைவிதிக்கப்பட்டிருந்தது.
எனினும் கடந்த ஜனவரியில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிப்பதில் உலகத் தமிழர் பேரவையும் முக்கிய பங்கினை ஆற்றியிருந்தது. அதே போன்று உள்நாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மைத்திரியுடன் இணைந்து அந்த செயற்பாட்டில் பங்கு கொண்டது.
தற்போது உலகத் தமிழர் பேரவை மீதான தடை நீக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் உள்நாட்டிலும் இந்த இரண்டு அமைப்புகளும் இணைந்து செயற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலைமை எதிர்வரும் நாட்களில் முன்னெடுக்கப்படவுள்ள போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அத்துடன் நாட்டின் எதிர்கால பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்று திவயின பத்திரிகை தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

ad

ad