புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஏப்., 2016

நல்லவர்கள் அனைவரும் எங்கள் கூட்டணியில் இருக்கிறார்கள்: தாம்பரத்தில் விஜயகாந்த் பிரச்சாரம்

நல்லவர்கள் அனைவரும் எங்கள் கூட்டணியில் இருக்கிறார்கள் என்று தாம்பரத்தில் விஜயகாந்த் பிரச்சாரம் செய்தார்நல்லவர்கள் அனைவரும் தங்கள்
கூட்டணியில் இருப்பதாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிரச்சாரம் செய்தார்.
தே.மு.தி.க.-மக்கள் நலக் கூட்டணி-த.மா.கா. கூட்டணி உறுதியானதையடுத்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தனது முதற்கட்ட பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார். சென்னை தாம்பரத்தில் இன்று மாலை நடந்த பிரச்சார கூட்டத்தில் விஜயகாந்த் பேசியதாவது:-
இந்த சட்டமன்றத் தேர்தலில் எங்கள் கூட்டணி வேண்டுமா? இல்லை தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணிகள் வேண்டுமா? என்பதை மக்கள் முடிவு எடுப்பார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் படித்த மற்றும் படிக்காத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுப்போம்.
மு.க. ஸ்டாலின் எண்ணங்களும் நோக்கங்களும் அவரை அழித்துவிடும். இந்த தேர்தலில் அனுதாபத்தை ஏற்படுத்த கருணாநிதி முயற்சி செய்கிறார்.
நல்லவர்கள் அனைவரும் எங்கள் கூட்டணியில் உள்ளனர். தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையே நடைபெறும் தேர்தல் இது. எங்கள் கூட்டணி வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்

201604122016115930_vijayakanth-says-all-good-peoples-in-his-coalition_SECVPF
.

ad

ad