திமுக தலைவர் கலைஞரை, மக்கள் தேமுதிக ஒருங்கிணைப்பாளர் வி.சி.சந்திரகுமார் மற்றும் நிர்வாகிகள் சந்தித்துப் பேசினர்.
இதில் திமுக கூட்டணியில் ஈரோடு கிழக்கு, கும்மிடிப்பூண்டி, மேட்டூர் தொகுதிகள் மக்கள் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டது. 3 தொகுதிகளிலும் மக்கள் தேமுதிக வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார்கள் என உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
அதன்படி ஈரோடு கிழக்கில் சந்திரகுமார், கும்மிடிப்பூண்டியில் சேகர், மேட்டூரில் பார்த்திபன் ஆகியோர் போட்டியிடுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.