கூட்டு எதிரணியினரால் கிருளப்பனையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மே தின ஊர்வலத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலந்து கொள்வது உறுதி செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்ச ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையில் காலியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மே தின ஊர்வலத்தில் கலந்து கொள்ளவுள்ளதாக முன்னர் தகவல்கள் வெளியாகிய நிலையில், இது குறித்து வினவியபோதே தினேஷ் குணவர்த்தன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.