புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 மே, 2016

சென்னை காவல் ஆணையர் மாற்றம்: தமிழக ஏடிஜிபியாக சைலேந்திரபாபு: தேர்தல் ஆணையம் நடவடிக்கை



தமிழக சட்டப் பேரவைத் தேர்தலை ஒட்டி தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை காவல் ஆணையர் டி.கே.ராஜேந்திரன் மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக சென்னை மாநகர காவல் ஆணையராக அசுதோஷ் சுக்லா நியமிக்கப்பட்டுள்ளார்.

சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக ஜே.கே. திரிபாதி மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக கூடுதல் டிஜிபியாக சி.சைலேந்திரபாபு நியமிக்கப்பட்டுள்ளார்.

தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில், காவல் அதிகாரிகளை மாற்றம் செய்து உள்துறை செயலர் அபூர்வ வர்மா ஆணையிட்டுள்ளார்.

ad

ad